சிந்தகாயலா அய்யண்ணா பட்ருடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தகாயலா அய்யண்ணா பட்ருடு
ஆந்திரப் பிரதேச அரசில் சாலை மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சர்
பதவியில்
29 மார்ச் 2017 – 29 மே 2019
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச அரசில் பஞ்சாய்த்து ராஜ், ஊரகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
பதவியில்
8 ஜூன் 2014 – 28 மார்ச் 2017
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
தொகுதிநர்சிபட்டினம்
ஆந்திரப் பிரதேச அரசில் காடுகள் & சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
பதவியில்
1999–2004
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச அரசில் அறிவியல் & தொழில்நுட்பம் துறை அமைச்சர்
பதவியில்
1999–2004
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச அரசில் தொழிநுட்பக் கல்வித் துறை அமைச்சர்
பதவியில்
1984–86
ஆந்திரப் பிரதேச அரசில் சாலை மற்றும் கட்டங்கள் & விளையாட்டுத் துறை அமைச்சர்
பதவியில்
1994–95
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–98
தொகுதிஅனகாபள்ளி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2004–09
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 செப்டம்பர் 1957 (1957-09-04) (அகவை 66)
நர்சிபட்டினம் மண்டலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பத்மாவதி
பிள்ளைகள்2 மக்ன்கள் (விஜய் மற்றும் ராஜேஷ்)
வாழிடம்நர்சிபட்டினம் மண்டலம்
இணையத்தளம்ayyannapatrudu.com

சிந்தகாயலா அய்யன்னா பட்ருடு (Chintakayala Ayyanna Patrudu) (பிறப்பு 4 செப்டம்பர் 1957) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். நர்சிப்பட்டினம் தொகுதியில் இருந்து ஆந்திர பிரதேச சட்டமன்றத்திற்கு பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினத்தில் கொப்புல வெலமா குடும்பத்தில் [2] [3] பிறந்தார். 1978 இல் காக்கிநாடாவிலுள்ள அரசுக் கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக இருந்து அரசியலை தொடங்கினார். பின்னர், விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினம் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். 1983-88, 1994-96, 1999-2009 மற்றும் 2014 ஆகிய ஆறு முறை தெலுங்கு தேசம் கட்சி சார்பில், அதே தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-98ல் அனகப்பள்ளி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-93, 2009 மற்றும் 2019 இல் அனகப்பள்ளி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், மேலும் இவர் 2014-19 வரை ஆந்திர பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]