சித்திரகூட அருவி
Appearance
சித்திரகூட அருவி | |
---|---|
चित्रकोट प्रपात | |
இரவில் சித்திரகூட அருவி | |
அமைவிடம் | ஜெகதல்பூர், சத்தீஸ்கர் |
ஆள்கூறு | 19°12′23″N 81°42′00″E / 19.206496°N 81.699979°E |
வகை | அருவி |
மொத்த உயரம் | 29 மீட்டர் (95 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | மூன்று |
நீர்வழி | இந்திராவதி ஆறு |
சித்திரகூட அருவி (Chitrakot Falls) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்திலுள்ள மேற்கு சகதல்பூரில் அமைந்திருக்கும் ஓர் அருவி ஆகும். இது சகதல்பூருக்கு மேற்கே 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 29 மீட்டர் (95 அடி) உயரம் உடையது.[1][2] சித்ரகூட நீர்வீழ்ச்சி இந்திராவதி ஆற்றில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சியாகும். சூரிய ஒளிக்கு ஏற்ப இந்த நீர்வீழ்ச்சியின் வண்ணம் மாறுகிறது.[3] பருவகாலங்களில் இந்த நீர்வீழ்ச்சி அதிகமான அகலத்தைக் கொண்டிருக்கும். இந்தியாவின் மிக அகலமான அருவியும் இதுவேயாகும்.[4] இந்த அருவி பருவகாலங்களில் காணும் தோற்றத்தின் அடிப்படையில் இந்தியாவின் நாயகரா என அழைக்கப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chitrakote Waterfalls, Bastar". Chhattisgarh Tourism Board. Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Kale 2014, ப. 251–53.
- ↑ "இந்தியாவின் நயாகரா: சூரிய ஒளிக்கு ஏற்ப நிறம் மாறும் நீர்வீழ்ச்சி". BBC News தமிழ். 2022-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
- ↑ Singh 2010, ப. 723.
- ↑ Puffin Books (15 November 2013). The Puffin Book of 1000 Fun Facts. Penguin Books Limited. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-405-8.