சிசுநாக வம்சம்
சிசுநாகப் பேரரசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி மு 413–கி மு 345 | |||||||||
தலைநகரம் | ராஜகிரகம், பின்னர் வைசாலி | ||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் மகதி பிராகிருதம் பிற பிராகிருத மொழிகள் | ||||||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் சமணம்[1] | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
• கி மு 413–395 | சிசுநாகன் | ||||||||
• கி மு 367–345 | மகாநந்தி | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கி மு 413 | ||||||||
• முடிவு | கி மு 345 | ||||||||
|
சிசுநாக வம்சம் (Shishunaga dynasty) என்பது சிசுநாகன் எனும் அரசரால் நிறுவப்பட்ட ஒரு மகத வம்சமாகும். இவர் கிமு 412ல் மகதப் பேரரசை நிறுவினார். ராஜகிரகம் இப்பேரரசின் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் பாடலிபுத்திரத்திற்கு (தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. [2]
மகத நாட்டு மன்னர் சிசுநாகன் அவந்தி நாட்டை வென்று மகதத்துடன் இணைத்துக் கொண்டார். சிசுநாகனுக்குப் பின் மன்னரான அவரது மகன் காலசோகன் எனும் காகவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாவடது இரண்டாம் பௌத்த சங்கம் வைசாலியில் கூடியது.