சாந்தா வசிஷ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்தா வசிஷ்டர் (Shanta Vasisht)(பிறப்பு 1926[1]) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1950கள் மற்றும் 1960களில் இவர் தில்லி மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கல்வி[தொகு]

வசிஷ்டர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவரது தந்தை, எல்.டி. வசிஷ்டர், பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.[1][2][3] இவர் தனது மாணவ பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் தில்லி கிளையில் தீவிரமாக பணியாற்றினார். கிங்ஸ்வே அகதிகள் குழுவில் பணியாற்றினார்.[2] 1950ஆம் ஆண்டில் இவர் கப்பா ஆல்பா தீட்டா சேவையகத்தின் வெளிநாட்டு மாணவர் உதவித்தொகை மூலம் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியைப் படித்தார்.[2][4]

தில்லி சட்டசபை[தொகு]

இந்தியா திரும்பியதும், வசிஷ்டர் 1952 தில்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். கோட்லா பெரோஸ் ஷா தொகுதியில் காங்கிரசு கட்சி வேட்பாளராக வசிஷ்டர் நிறுத்தப்பட்டார். இவர் பாரதிய ஜனசங்கத்தின் வி.பி. ஜோஷியை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்த வாக்குகளில் வசிஷ்டர் 4,646 வாக்குகள் (தொகுதியில் 56.26% வாக்குகள்) பெற்றார்.[5] 1953ஆம் ஆண்டு தில்லியின் முதலமைச்சர் சவுத்ரி பிரம்ம பிரகாஷ் தில்லி மாநில அரசாங்கத்தில் கல்வித் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6][7] இவரது தேர்வினை தில்லியில் உள்ள காங்கிரசு சட்டமன்றக் கட்சிக்குள் உள்ள சிறுபான்மை பிரிவினர் விமர்சித்தனர். இவர்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் துணை அமைச்சர்களைப் பரிந்துரைக்கக் கூடாது என்று கூறினர்.[6]

1954-ல் தில்லி நூலகச் சங்கத்தின் மறுமலர்ச்சியில் வசிஷ்டர் பங்கேற்று, சங்கத்தின் மிக நீண்ட தலைவராகப் பணியாற்றினார்.[8][9]

மக்களவை[தொகு]

வசிஷ்டர் 1960-ல் மாநிலங்களவை (இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியின் அரசாங்கங்களின் கீழ் இவரது பதவிக்காலம் 3 ஏப்ரல் 1960 முதல் 2 ஏப்ரல் 1966 வரை நீடித்தது.[10][11]

பிந்தைய காலம்[தொகு]

2008-ல் வசிஷ்டர் நேரு டு ஈராக் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தனது அனுபவங்களை விவரித்தார்.[12] 2013ஆம் ஆண்டு வரை, வசிஷ்டர் சர்வோதயா சிற்றூரில் வசித்து வந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Chief Electoral Officer, Delhi. ELECTORAL ROLL 2013, STATE- (U05) DELHI பரணிடப்பட்டது 15 மார்ச்சு 2013 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 2.2 Woman Lawyer Plans Return to Native India, Pittsburgh Post-Gazette – 22 June 1950
  3. Ministry of Defence. List of erstwhile CAOs & Joint Secretary பரணிடப்பட்டது 2013-12-16 at the வந்தவழி இயந்திரம்
  4. Kappa Alpha Theta. 1946–1958
  5. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF DELHI
  6. 6.0 6.1 Puri, Yogesh. Party Politics in the Nehru Era: A Study of Congress in Delhi. New Delhi, India: National Book Organisation, 1993. p. 102
  7. Teacher Education. PROCEEDINGS OF THE TWENTY FIRST MEETING பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
  8. Library Herald, Vol. 7–9. Delhi Library Association., 1965. p. 87
  9. Ranganathan, Shiyali Ramamrita, and Prithvi Nath Kaula. A Librarian Looks Back: An Autobiography of Dr. S.R. Ranganathan. New Delhi: ABC Publ. House, 1992. p. 378
  10. The Telegraph. Disruption shame in House
  11. Delhi Pradesh Congress Committee. FORMER MEMBERS OF RAJYA SABHA FROM DELHI பரணிடப்பட்டது 2013-08-13 at the வந்தவழி இயந்திரம்
  12. The Tribune. Requiem to a bygone era
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_வசிஷ்டர்&oldid=3802138" இலிருந்து மீள்விக்கப்பட்டது