சங்கர் ராஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர் ராஜி
பிறப்புநேசதுரை திருநேசன்
(1949-11-11)11 நவம்பர் 1949
உரும்பிராய், யாழ்ப்பாணம்
இறப்பு10 சனவரி 2005(2005-01-10) (அகவை 55)
லண்டன், இங்கிலாந்து
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விவிவசாய பொறியியல், இயந்திர பொறியல்
பணிபொறியியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975- 2003
அறியப்படுவதுஈரோஸ் நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அபுஜீகாத்(நூல்)
அரசியல் கட்சிஈழவர் சனநாயக முன்னணி
அரசியல் இயக்கம்ஈழப் புரட்சி அமைப்பு
பெற்றோர்மாணிக்கம் நேசதுரை, பொற்கொடி
வாழ்க்கைத்
துணை
நிர்மலா
பிள்ளைகள்நேசன், ரஜினி, நிரஞ்சனி

சங்கர் ராஜி என்ற இயக்கப்பெயரால் அறியப்படும் நேசதுரை திருநேசன் ( இலங்கைத் தமிழ்ப் போராளியும் ஈழ இயக்கங்களி்ல் ஒன்றான ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். இவர் அபுஜீகாத் எனும் நூலையும் எழுதியிருக்கின்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சங்கர் ராஜி 1949 நவம்பர் 11 இல்[1] இலங்கையின் வடமாகாணத்திலிலுள்ள யாழ்ப்பாணத்தில்.[2] உரும்பிராய் எனும் ஊரில் மாணிக்கம் நேசதுரை, பொற்கொடி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்தார்..[3][4] சங்கர் ராஜி சிறுபராயத்தில் கொழும்பில் வசித்து வந்தார்.[2]

1958 ஆம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் ராஜியின் குடும்பம் ஏனைய பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் போலவே தமிழர் பிரதேசமான வடபகுதிக்கு இடம்பெயர்ந்தது.[2] 1966 ஆம் ஆண்டு சங்கர் ராஜியின் குடும்பம் மீண்டும் கொழும்பிற்கு திரும்பியது. ஆனால் சங்கர் ராஜி கொழும்பிற்கு செல்லாமல் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்.[2] இலண்டன் நகரில் வேளாண்மைப் பொறியியல் மற்றும் தானுந்து பொறியியல் பட்டப்படிப்பு படித்தார்.[2] பட்டப்படிப்பின் பின் போர்ட் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பொறியியலாளராக வேலை செய்தார்.[5]

1976ஆம் ஆண்டு லண்டனில் நிர்மலா என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நேசன்,ரஜினி, நிரஞ்சனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[3][4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சங்கர் ராஜி 1975 ஆம் ஆண்டு இ. இரத்தினசபாபதி, வே. பாலகுமாரன், பாலநடராஜ ஐயர், அருட்பிரகாசம் ஆகியோருடன் இணைந்து ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தை நிறுவுவதில் பங்குகொண்டார்.[5] அதன் பின்னர் போர்ட் நிறுவனத்தின் பொறியியலாளர் வேலையைத் துறந்து, பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டு,[5] இலங்கை திரும்பி முழுநேர அரசியல் செயற்பாடுகளி்ல் ஈடுப்பட்டார்.

ஈழப்புரட்சி அமைப்பின் பொதுக்குழுவிலும், அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக்குழுவிலும் உறுப்பினராக இருந்த சங்கர் ராஜி, ஈரோசின் ஆயுதப்பிரிவிற்கும் பொறுப்பாகவிருந்தார்.[5]

1984 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் சூத்திரதாரியாக செயற்பட்ட காரணத்தினால், சிஜஏ உளவு நிறுவனத்தினால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.[2] 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தையில் ஈரோஸ் அமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொண்டார்.[5]

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாக ஈரோஸ் அமைப்பு கலைக்கப்படுவதாகவும், உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்று ஈரோசின் பொதுச்செயலாளர் வே. பாலகுமாரன் அறிவித்ததை தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பினர்கள் வே. பாலக்குமாரனின் தலைமையில் விடுதலைப்புலிகளுடன் இணைந்துக்கொண்டனர்.[6] சிலர் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பினர். சங்கர் ராஜி ஈரோஸ் அமைப்பை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். பின்னர் கொழும்பு சென்ற சங்கர் ராஜி, சுதா மாஸ்டர் என்பவருடன் இணைந்து ஈரோஸ் அமைப்பை செயற்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டார்.[6] ஈரோஸ் அமைப்பு அர்சௌ-ஆதரவுக் குழுவாகவும், புலிகளுக்கு எதிரான துணை இராணுவக் குழுவாகவும், ஓர் அரசியல் கட்சியாகவும் செயல்பட்டது.[7] ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போன்ற ஏனைய அரசு-சார்பு துணை இராணுவக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டது.[6]

சங்கர் ராஜி சென்னையில் வாழ்ந்து வந்தார். கொழும்பில் ஈரோசின் நடவடிக்கைகளி சுதா மாஸ்டர் கவனித்து வந்தார்.[6] 1997 ஆம் ஆண்டு வெளிநாட்டு நாணயங்கள் கடத்திய குற்றச்சாட்டில் சென்னையில் கைதுசெய்யப்பட்ட சங்கர் ராஜி, ஓராண்டு சிறை தண்டனைக்குள்ளானார்.[1][6] இலங்கை திரும்பிய சங்கர் ராஜி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சின் கீழிருந்த அரசுத் திணைக்களம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றினார்.[1][8]

இறப்பு[தொகு]

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின் இலண்டன் திரும்பிய சங்கர் ராஜி 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.[3][4][5][9] ஈரோஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அவரது மகன் நேசன் சங்கர் ராஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Struggle for Tamil Eelam: Shankar Rajee - Founder-member of EROS". Tamil Nation.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Meadows, Mark Stephen (29 June 2009). "Tea With Terrorist". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2009/06/we-took-some-tea-as-symbol.html. 
  3. 3.0 3.1 3.2 "Obituaries". Tamil Times XXIV (2): 36. பெப்ரவரி 2005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/37/3645/3645.pdf. 
  4. 4.0 4.1 4.2 "Obituaries". டெய்லிநியூஸ். 13 சனவரி 2005. http://archives.dailynews.lk/2005/01/13/obits.html. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Sambandan, V. S. (11 சனவரி 2005). "EROS founder member dead". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2016-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160115015028/http://www.thehindu.com/2005/01/11/stories/2005011101701400.htm. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "EROS files nominations for PC elections". தமிழ்நெட். 7 December 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2443. 
  7. Parashar, Swati (2014). Women and Militant Wars: The Politics of Injury. Routledge. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134116065. http://books.google.com/books?id=YoH8AgAAQBAJ. 
  8. de Silva, Neville (19 டிசம்பர் 2005). "Tamil Community shocked by another abduction revelation". ஏசியன் டிரிபியூன். http://asiantribune.com/news/2005/12/19/tamil-community-shocked-another-abduction-revelation. 
  9. "Shankar Raji dies". தமிழ்நெட். 10 January 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13931. 
  10. Lansford, Tom, தொகுப்பாசிரியர் (2015). Political Handbook of the World 2015. CQ Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1483371557. https://books.google.com/books?id=yNGfBwAAQBAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_ராஜி&oldid=3242635" இலிருந்து மீள்விக்கப்பட்டது