கட்டகாம்பல் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு பார்த்த நுழைவாயில்

கட்டகாம்பல் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கட்டகாம்பல் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். கோயிலின் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.[1] இருப்பினும், இக்கோயில் மேற்கு நோக்கிய கருவறையைக் கொண்ட கட்டகாம்பாள் பகவதிக்காக புகழ்பெற்றதாகும். கேரளாவில் உள்ள 108 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோயிலானது பரசுராமரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] [3][4] கட்டகாம்பால் கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகக் கருதப்படுகிறது. இக்கோயில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற பூரம் விழாவிற்காக (கட்டகாம்பாள் பூரம்) மிகவும் புகழ் பெற்றதாகும். மலையாள மாதமான மேடத்தில் (ஏப்ரல் / மே) பத்து நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவானது பூரம் நாளில் (பூரம் நட்சத்திரம்) முடிவடைகிறது. பூரம் திருவிழாவின் முக்கியக் கூறுகளாக காளி - தாரிகா போர் மற்றும் அரக்கன் தரிகாசுரனைக் கொன்ற தாரிகா வதம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. [5]

கோயில் கட்டிடக்கலை[தொகு]

இக்கோயில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தீபகற்பப் பகுதியான கட்டகாம்பல் கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. கோயில் கட்டிடக்கலையை நோக்கும்போது சிவன் கோயில்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறலாம். கோயிலின் முழு வளாகமும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் கட்டகாம்பல் என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  2. 108 Siva Kshetrangal. 
  3. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  4. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  5. "Kerala Culture- Kattakambal Pooram". பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.

ஒளிப்படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டகாம்பல்_கோயில்&oldid=3836967" இலிருந்து மீள்விக்கப்பட்டது