ஐசாக் தம்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசாக் தம்பையா
Rev. Isaac Tambyah
Izaac Tambyah.jpg
1930 இல் ஐசாக் தம்பையா
பிறப்புஆகத்து 19, 1869(1869-08-19)
மானிப்பாய், யாழ்ப்பாணம்
இறப்பு1941 (அகவை 71–72)
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஇறையியலாளர், எழுத்தாளர்
சமயம்கிறித்தவர்
பெற்றோர்ஆறுமுகம் தம்பிப்பிள்ளை
வாழ்க்கைத்
துணை
மங்களநாயகம் தம்பையா

தம்பிப்பிள்ளை ஐசாக் தம்பையா (Rev. Tambi Piḷḷai Isaac Tambyah, 19 ஆகத்து 1869 - 1941) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஐசாக் தம்பையா யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த ஆறுமுகம் தம்பிப்பிள்ளை (இறப்பு: பெப்ரவரி 5, 1905) என்பவருக்கு 1869 ஆகத்து 19 இல் பிறந்தவர்.[1] தந்தை தம்பிப்பிள்ளை ஆசிரியரும், மானிப்பாய் செம்பா உடையார் என்பவரின் பேரனும் ஆவார்.[1]

ஐசாக் தம்பையா தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித தோமையர் கல்லூரியிலும் கற்றார்.[1] தோமையர் கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார். இளம் வயதிலேயே Garland of Ceylon verses, By the Bridge ஆகிய இரண்டு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டார்.[1]

பணி[தொகு]

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் கொழும்பு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். 1899 ஆம் ஆண்டில் சட்டவாளராக அங்கீகரிக்கப்பட்டு,[1] 1901 வரை கொழும்பிலும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் மீண்டும் 1908 ஆம் ஆண்டில் மீண்டும் கொழும்பு திரும்பி உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப்[2] பணியாற்றினார்.[3]

Ceylon Law Review என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3][4] 1904 ஆம் ஆண்டில் The Christian Review என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்.[3]

1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் சட்டவாளர் கழகத்தில் (Gray's Inn) உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தின் எழுத்தாளர்களின் ஒருங்கிணைந்த கழகத்தின் (Incorporated society of authors) உறுப்பினராகவும் சேர்ந்தார். இக்கழகத்தில் இணந்த முதலாவது இலங்கையர் இவரே.[3] பின்னர் 1913 ஆம் ஆண்டில் அங்கிருந்து மலாயா சென்று பினாங்கு மாநிலத்தில்]] வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இறையியல்[தொகு]

ஐசாக் தம்பையா மலாயாவில் இருந்த போது இறையியல் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் இறையியலில் பட்டம் பெற்று திருச்சபையில் குருவானவராகப் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி தமது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு முழு நேர இறையியலில் நாட்டம் செலுத்தினார்.[5] 1924 இல் உதவிக்குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அடுத்த இரண்டாண்டுகளில் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டு சுண்டிக்குளி பரி. யோவான் திருச்சபையில் பணியில் அமர்த்தப்பட்டார்.[1] அங்கு அவர் 1938 வரை பணியாற்றினார். பின்னர் பண்டாரவளையில் முதன்மைக் குருவாகப் பணியில் அமர்த்தப்பட்டார்.[5] 1940களின் ஆரம்பத்தில் கொழும்பு சான் செபஸ்டியன், புனித திரித்துவத் திருச்சபையில் பணியாற்றினார். கொழும்பு இறையியல் பாடசாலையில் துணை அதிபராகவும் பணியாற்றியிருந்தார்.[1]

சமூகப் பணிகள்[தொகு]

1934 சூன் 9 அன்று யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆரம்பிக்கும் நோக்கோடு நிறுவப்பட்ட குழுவின் துணைத் தலைவராக ஐசாக் தம்பையா இருந்துள்ளார்.[6]

குடும்பம்[தொகு]

ஐசாக் தம்பையா தெல்லிப்பழையைச் சேர்ந்த ஜே. டபிள்யூ. பார் குமாரகுலசிங்க முதலியார் என்பவரின் இளைய மகளான மங்களநாயகம் என்பவரைத் திருமணம் புரிந்தார். மங்களநாயகம் நொறுங்குண்ட இருதயம் என்ற பெயரில் 1914 ஆம் ஆண்டிலும்,[3][7][8] அரியமலர் என்ற பெயரில் 1926 இலும்[7] இரண்டு புதின நூல்களை எழுதினார். இவரது தந்தை குமாரகுலசிங்க முதலியார் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.[3]

எழுதிய நூல்கள்[தொகு]

  • A Garland of Ceylon Verse 1837-1897, Colombo: Ceylon Printing Works, 132 பக்கங்கள்[9]
  • Psalms of a Saiva Saint, 1925[10]
  • Gleams of God: A Comparative Study of Hinduism, Buddhism, and Christianity, 1925[11]
  • Digests of the Law of Contract and Commentary on the Ceylon Penal Code, 1897: கொழும்பு[4][12]
  • In the Days of Sambasiva, 1932

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 எஸ். ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 16–17. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. "The Revised Reports of Ceylon" (PDF). 26 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.308
  4. 4.0 4.1 Wright, Arnold. "Twentieth Century Impressions of Ceylon". Asian Educational Services. 26 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "DR. ISAAC TAMBYAH". 26 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. சுப்பிரமணியம் சோமசுந்தரம் (5 அக்டோபர் 2004). "Manipay Hindu College in my time - an alumnus remembers". டெய்லி நியூசு. 26 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. 7.0 7.1 "Barr-Kumarakulasinghe's and other families". 4 ஏப்ரல் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  8. கா. சிவத்தம்பி. "யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு". சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு. 26 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  9. Joshi, Irene, compiler, "Poetry Anthologies" பரணிடப்பட்டது 2009-08-30 at the வந்தவழி இயந்திரம், "Poetry Anthologies" section, "University Libraries, University of Washington" website, "Last updated May 8, 1998", retrieved June 16, 2009. 2009-06-19.
  10. Tambyah, T. Isaac (1925). Psalms of a Saiva Saint. Asian Educational Services. https://books.google.com.au/books?id=5OXbDZNVk28C. 
  11. Tambyah, Tambi-Piḷḷai Isaac (1925), A Comparative Study of Hinduism, Buddhism, and Christianity, Indian Book Gallery, ISBN 978-81-7755-915-6
  12. "A Digest of thw Law of Contract" (PDF). 26 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசாக்_தம்பையா&oldid=3593972" இருந்து மீள்விக்கப்பட்டது