ஏம்பல் முத்துஅய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு முத்துஅய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:ஏம்பல், ஆவுடையார்கோயில் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அறந்தாங்கி
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:முத்துஅய்யனார்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஏம்பல் முத்துஅய்யனார் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் முத்துஅய்யனார் சன்னதியும், 1) முத்துகருப்பர் 2) முத்துகாளி 3) சன்னாசி பிள்ளையார் 4) அரசிமகன் 5) பேச்சி அம்மன் 6) உலகநாயகி 7) வீரபத்திரர் 8) தெண்டாயுதபாணி 9) யானை 10) பலிபீடம் 11) வடகரைமுருகன் 12) தென்கரை விநாயகர் 13) பிள்ளையார் 14) தெண்டாயுதபாணி 15) விஸ்வநாதர் 16) விசாலாட்சி உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)