ஊத்துமலை பால சுப்பிரமணியர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊத்துமலை பால சுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:சேலம் மாவட்டம்
அமைவு:ஊத்துமலை, சேலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:தண்டாயுதபாணி, முருகன் பால சுப்பிரமணியர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்

ஊத்துமலை பால சுப்பிரமணியர் திருக்கோயில், சேலம் சீல்நாய்க்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள ஊத்துமலை என்னும் மலை மேல் அமைந்துள்ளது. மலைக்கு செல்ல சாலை வசதி உள்ளது.


திருவிழா[தொகு]

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம்,சிவராத்திரி, பங்குனி உத்திரம் , கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது.

திறக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

பிரார்த்தனை[தொகு]

நேர்த்திக்கடன்[தொகு]

வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு திருமுழுக்கு செய்தும், புது ஆடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]