சி. எச். பிரகலாத ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி.எச். பிரகலாத ராவ் (C.H. Prahlada Rao) ( ஜனவரி 13, 1923 - பிப்ரவரி17, 2002) ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் எழுதும் ஓர் இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் ஒரு சுதந்திர-பத்திரிகையாளர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் கர்நாடகாவின் சீமக்காவில் பிறந்த பிரகலதா ராவ் தனது குழந்தை பருவத்திலேயே தாயை இழந்து தனது தந்தை சி.ஆர். அனுமந்த ராவின் அன்பான பராமரிப்பில் வளர்ந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சிமோகாவில் பெற்றார். பிரகலாத ராவ் கல்லூரியில் நுழைவதற்கு முன்பே அவரது தந்தை இறந்தார். பிரகலதா ராவின் ஆங்கில மொழியின் தேர்ச்சியைக் கவனித்த அவரது ஆசிரியர்களும் உறவினர்களும் மைசூரில் உள்ள புகழ்பெற்ற மகாராஜா கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெறுமாறு அறிவுறுத்தினர். பிரகலாத ராவ் 1948 இல் பி.ஏ ( கௌரவம்) பட்டத்தை, மூன்று தங்கப் பதக்கங்களுடன் (இந்தி, ஆங்கிலம் மற்றும் சமூகவியல்) பெற்றார். இவர் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டம் பெற விரும்பினாலும், இவர், தன் வாழ்க்கையை நடத்துவதற்கு, சம்பாதிக்கத் தொடங்குவது அவசியம் என்று உணர்ந்தார்.

பெங்களூருக்கு வந்து இந்திய காபி வாரியத்தில், ஒரு எழுத்தர் பதவியைப் பெற்றார், அங்கு இவர் 1981 ல் ஓய்வு பெறும் வரை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றினார். இந்த பதவிக் காலத்தில், பிரகலாத ராவ் ஐந்து வருடங்களையும் (1969-1974) புதுதில்லியில் கழித்தார். பிரகலாத ராவ், கோமளா பாய் என்பவரை மணந்தார். அவருக்கு சி.பி. மோகன் மற்றும் சி.பி. ரவிக்குமார் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். பிரகலாத ராவ் எளிமை, நட்பு, நேரான பேச்சு மற்றும் நேர்மை ஆகியவற்றால் அறியப்பட்டார். இவர் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பவராக இருந்தார். ஆனால் இவருக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தவை சுயசரிதைகள் ஆகும்.

எழுதுதல்[தொகு]

பிரகலாத ராவ் ஒரு இளம் மாணவராக இருந்தபோதும் மகாத்மா காந்தியின் சிந்தனையால் தாக்கம் ஏற்பட்டு, அவர் வழியை பின்பற்றினார். மைசிண்டியாவின் சுதந்திர பத்திரிகையாளராக தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். மைசிண்டியாவின் புகழ்பெற்ற ஆசிரியர் பிலிப் ஸ்ப்ராட் இந்த இளம் எழுத்தாளருக்கு, வாய்ப்பைக் கொடுத்து இவரை ஊக்குவித்தார்.

நினைவு குறிப்பு[தொகு]

சி. எச். பிரகலாத ராவ், அந்த இதழின் ஆசிரியரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். [1] "நான் மைசிண்தியாவில் எழுதினேன். இந்த ஆங்கில வாராந்திர இதழை, திரு பிலிப் ஸ்ப்ராட் திருத்துகிறார். "ஆசிரியர் என்னிடம் அசாதாரண தயவுடன் நடந்து கொண்டார். செவ்வாய்க்கிழமை அச்சுக்குப் போக வேண்டிய கட்டுரையின் பிரதியை, அதை, உருவாக்கும் அறைக்குச் சென்று கொடுக்கும் சுதந்திரத்தை எனக்கு கொடுத்திருந்தார். ஒருமுறை, எனது பிரதியில் ஒரு சில காற்புள்ளிகளை போட்டதாக ஸ்ப்ராட் எனக்கு உறுதியளித்தார். அதை அவர் முதன்மை பிரதியிலும் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல், காற்புள்ளியின் பயன்பாட்டை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். "

பணியாற்றிய இடங்கள்[தொகு]

பிரகலாத ராவ், மைசிண்தியாவுக்காக கடைசி வரை எழுதினார். பெரிய மற்றும் சிறிய கன்னட எழுத்தாளர்கள், புத்தகங்கள் மற்றும் கலைஞர்களைப் பற்றி இவர் எழுதுவார். பின்னர், இவர் டெக்கான் ஹெரால்ட் (பெங்களூர்), இந்தியன் எக்ஸ்பிரஸ் (பெங்களூர்), இந்துஸ்தான் டைம்ஸ் ( டெல்லி ), ஈவினிங் நியூஸ் (டெல்லி) மற்றும் தி இந்து (பெங்களூர்) ஆகியவற்றிற்காக எழுதத் தொடங்கினார். இவரது எழுத்து வாழ்க்கை ஆறு தசாப்தங்களாக பரவியது. டெக்கான் ஹெரால்ட், கன்னட பிரபா, மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிற்கான புத்தக மதிப்புரைகளை இவர் வழங்கத் தொடங்கினார். இவர் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததற்காகவும், இவரது விமர்சனத்தில் ஆக்கபூர்வமாகவும் இருந்தார்.

தொடர் கட்டுரை[தொகு]

கன்னட எழுத்தாளர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் குறித்து தொடர் கட்டுரைகளை எழுதுமாறு தி இந்து அவரிடம் கேட்டுக்கொண்டது. [2] செயலில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சி.எச். பிரகலாத ராவ் 25 ஆண்டுகளுக்கும் மேலாக "உங்களுக்கும் எனக்கும் இடையில்" என்ற வாராந்திர கட்டுரையை எழுதினார். இந்த கட்டுரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் தி இந்து பத்திரிகையின் பெங்களூர் பதிப்பில் வெளிவந்து பெரும் புகழ் பெற்றது. [3] எந்தவொரு தலைப்பை பற்றியும் மிகச் சிறியதாகவோ அல்லது பெரிதாகவோ எழுதவில்லை. பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி இவர் எழுதினார், அவற்றைத் தீர்க்க தனது பேனாவின் சக்தியைப் பயன்படுத்தினார். ஆயிரக்கணக்கான வாசகர்களின் பிரச்சினைகளுக்கு இவர் தீர்வுகளை வழங்கினார்.

அகில இந்திய வானொலி[தொகு]

சி.எச். பிரகலாத ராவ் அகில இந்திய வானொலியுடன் (பெங்களூர்) நீண்ட மற்றும் பயனுள்ள தொடர்பை அனுபவித்தார். கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு நன்றாக மொழிபெயர்க்கும் திறன் காரணமாக, கன்னட நிகழ்ச்சிகளின் எழுத்துப் பிரதிகளை மொழிபெயர்க்க இவர் அடிக்கடி கோரிக்கைகளைப் பெற்றார். எழுத்தாளர்களை நேர்காணல் செய்ய பல சந்தர்ப்பங்களில் இவர் அழைக்கப்பட்டார். புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர்கள் இசையமைத்த திரைப்படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பிரபலமான இசை நிகழ்ச்சிகளின் அத்தியாயங்களில் ஒன்றை நடத்தினார். இவர் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டார். [4] பெங்களூரு நகரத்தின் மாறிவரும் நிலப்பரப்பு என்ற தலைப்பில் இவர் பேட்டி காணப்பட்டார் [5]

குறிப்புகள்[தொகு]

  1. "C.H. Prahlada Rao. CHP on himself". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.
  2. C.H. Prahlada Rao, Sketches of Kannada Writers and Drama Artists
  3. C.H. Prahlada Rao, Complete Collection of "Between You and Me" column writings
  4. Bala Belaku - Audio recording of a speech given by C.H. Prahlada Rao at All India Radio, 16-Dec-1995
  5. Bangalore-Then and Now, Interview of C.H. Prahlada Rao aired on All India Radio, Bangalore, on 23-May-1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எச்._பிரகலாத_ராவ்&oldid=3381840" இலிருந்து மீள்விக்கப்பட்டது