விரோதவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரோதவணி அல்லது விரோத அணி என்பது யாப்பிலக்கணத்தில் காணப்படும் முரண் தொடையின் அணியிலக்கண உருப்பாகும். யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் ஒன்றிற்கொன்று கலந்திருப்பதனையும் இவ்வுதாரணம் காட்டுகின்றது.

குறிப்பு[தொகு]

"மாறுபடு சொல், பொருள், மாறுபாட்டு இயற்கை,
'விளைவு தர உரைப்பது விரோதம் ஆகும்." என்கிறது தண்டியலங்காரம் 82-ம் பாடல்.

விளக்கம்[தொகு]

ஒரே செய்யுளுக்குள் மாறுபட்ட சொற்களையோ, பொருளையோ கொண்டிருப்பது

அணியின் வகைகள்[தொகு]

  1. சொல் விரோதம்
  2. பொருள் விரோதம்
  3. சிலேடை விரோதம்

எடுத்துக்காட்டு[தொகு]

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. - திருக்குறள், வான் சிறப்பு, அறத்துப்பால்

மேற்கண்ட குறளில் கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பது விரோத சொற்கள் என்பதால் இது சொல் விரோத அணியாகும்.

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின். - திருக்குறள், வாய்மை, துறவறவியல், அறத்துப்பால்

மேற்கண்ட குறளில் என்பது பொய்ம்மையும் வாய்மை விரோத பொருள்கள் என்பதால் இது பொருள் விரோத அணியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரோதவணி&oldid=1398137" இலிருந்து மீள்விக்கப்பட்டது