யாப்பிலக்கணம்
யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள். எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
பொருளடக்கம் |
யாப்பு என்னும் சொல் [தொகு]
சங்க நூல்களிலும் இச்சொல் இப்பொருளில் பரவலாக வருகிறது. யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவரும் இந்தப் பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார்.
யாப்பிலக்கண நூல்கள் [தொகு]
தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இந்நூல், அதன் மூன்று அதிகாரங்களில் ஒன்றான பொருளியலில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறுகின்றது. மேலும் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருளதிகாரம், அப்பிரிவுகளில் ஒன்றே செய்யுளியல் என்னும் யாப்பிலக்கணமாகும். இதைத் தவிர, யாப்பிலக்கணம் கூறும் மேலும் பல நூல்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்தன. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரண்டு மட்டுமே.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
அடிக்குறிப்பு [தொகு]