தேவிசரண் பருவா மகளிர் கல்லூரி
கல்லூரி நுழைவாயில் | |
வகை | பொது, பெண்கள், கலை அற்வியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1955 |
முதல்வர் | ஜினாமோனி பாயுயான் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | திப்ருகர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | Official website |
தேவிசரண் பருவா மகளிர் கல்லூரி (Devicharan Barua Girls' College) என்பது அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியாகும். இக்கல்லூரி 1955-இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி திப்ருகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]
வரலாறு[தொகு]
தேவி சரண் பருவா பெண்கள் கல்லூரி, 1955ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, அசாமில் பெண் கல்வியைப் பரப்புவதற்கு செயல்பட்டு வருகிறது. மறைந்த ராய் பகதூர் தேவிசரண் பருவாவின் நான்கு புகழ்பெற்ற மகன்களான ஹேரம்ப பிரசாத் பருவா, உமாசரண் பருவா, தேபா பிரசாத் பருவா மற்றும் பிஷ்ணு பிரசாத் பருவா ஆகியோரின் தாராள பங்களிப்புடன் இக்கல்லூரி நிறுவப்பட்டது. 56 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் மட்டுமே கொண்டு தொடங்கிய இக்கல்லூரி இப்போது முழுமையாகச் செயல்படும் கல்லூரியாகக் கலை மற்றும் அறிவியல் துறைகளில் 1800 மாணவியர் பயிலும் கல்லூரியாக உள்ளது. கல்லூரியின் அறிவியல் துறைகள் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
துறைகள்[தொகு]
கலைகள்[தொகு]
- அசாமிய மொழி
- வங்காள மொழி
- பொருளாதாரம்
- கல்வி
- ஆங்கிலம்
- புவியியல்
- வரலாறு
- தர்க்கம் மற்றும் மெய்யியல்
- அரசியல் அறிவியல்