தீர்த்தங்கரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.

இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன.

[தொகு] 24 தீர்த்தங்கரர்களின் பட்டியல்

  1. ரிசபர் (ஆதிநாதர்)
  2. அஜிதநாதர்
  3. சம்பவநாதர்
  4. அபிநந்தனநாதர்
  5. சுமதிநாதர்
  6. பத்மபிரபா
  7. சுபர்சவநாதர்
  8. சந்திரப்பிரபா
  9. புட்பதந்தா
  10. சீதாலநாதர்
  11. சிரேயான்சநாதர்
  12. வாசுபூச்யா
  13. விமலநாதர்
  14. அனந்தநாதர்
  15. தர்மநாதர்
  16. சாந்திநாதர்
  17. குந்துநாதர்
  18. அரநாதர்
  19. மல்லிநாதர்
  20. முனிசுவ்ரதா
  21. நமிநாதர்
  22. நேமிநாதர்
  23. பார்சுவநாதர்
  24. மகாவீரர்

[தொகு] இவற்றையும் காண்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தங்கரர்&oldid=858470" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்