தீர்த்தங்கரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன.
[தொகு] 24 தீர்த்தங்கரர்களின் பட்டியல்
- ரிசபர் (ஆதிநாதர்)
- அஜிதநாதர்
- சம்பவநாதர்
- அபிநந்தனநாதர்
- சுமதிநாதர்
- பத்மபிரபா
- சுபர்சவநாதர்
- சந்திரப்பிரபா
- புட்பதந்தா
- சீதாலநாதர்
- சிரேயான்சநாதர்
- வாசுபூச்யா
- விமலநாதர்
- அனந்தநாதர்
- தர்மநாதர்
- சாந்திநாதர்
- குந்துநாதர்
- அரநாதர்
- மல்லிநாதர்
- முனிசுவ்ரதா
- நமிநாதர்
- நேமிநாதர்
- பார்சுவநாதர்
- மகாவீரர்