சுவேதம்பர தேராபந்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமண சமயத்தில் சுவேதம்பர தேராபந்த் ஒரு பிரிவாகும். இப்பிரிவு ஆச்சார்யா பிக்ஷு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் முன்பு சுதனக்வாசி பிரிவை பின்பற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அவர் குரு ஆச்சார்யா ரகுநாதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியே வந்து இப்பிரிவை தொடங்கினார். சுதனக்வாசி பிரிவைப் போலவே, கடவுளுக்கு உருவம் இல்லை என்று முழங்கிய இப்பிரிவினர் சிலை வழிபாட்டினை எதிர்த்தனர்.