சாசுய் புன்குன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{Infobox folk tale |image= |Folk_Tale_Name=சாசுய் புன்குன்
Sassui Punnhun |Country=பாக்கித்தான், இந்திய |Region=பஞ்சாப், சிந்து, பலுச்சிசுதான் |Image_Caption= வார்ப்புரு:Sindhi folktales

சஸ்ஸி புன்னுஹ் அல்லது சாசுய் புன்குன் (ஆங்கிலம்: Sassui Punnhun; சிந்தி மொழி: سَسُئيِ پُنهوُن‎) என்பது பஞ்சாபி, சிந்தி மற்றும் பலூச்சி நாட்டுப்புறக் கதைகளில் வரும் காதல் கதை. போட்டியாளர்களால் பிரிந்து சென்ற தனது அன்புக் கணவனைத் தேடும் போது எந்த சிரமத்தையும் தாங்கும் உண்மையுள்ள காதலனைப் பற்றிய கதை இது.[1]

இந்தக் கதை ஷா ஜோ ரிசாலோவிலும் தோன்றுகிறது. பாக்கித்தானின் சிந்துவில் பிரபலமான ஏழு சோகக் காதல் கதைகளின் இதுவும் ஒரு பகுதியாகும். மற்ற ஆறு கதைகள் உமர் மார்வி, சோஹ்னி மெஹர், லிலன் சானேசர், நூரி ஜாம் தமாச்சி, சோரத் ராய் தியாச், மற்றும் மொமல் ரானோ என்பன. பொதுவாக இவை, சிந்துவின் ஏழு ராணிகள் அல்லது ஷா அப்துல் லத்தீப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் எனப்படுகிறது..

புன்னு[தொகு]

மிர் புன்குன் கான் (மிர் தோசுதீன்) பலுச்சிசுத்தானின் கெச்சின் பலோச் அரசரான மிர் ஆலி அல்லது ஆரியின் மகன்.

சசி[தொகு]

சசி சிந்துவில் (தற்போது பாக்கித்தானில் உள்ள) பன்பூர் ராஜாவின் மகள். சசி பிறந்தவுடன், சோதிடர்கள், இவர் அரச குடும்பத்தின் கெளரவத்திற்குத் தடையாக இருப்பதாகக் கணித்துள்ளனர். குழந்தையை ஒரு மரப்பெட்டியில் வைத்து சிந்துவில் வீசுமாறு மன்னர் உத்தரவிட்டார். பாம்போர் கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி ஒருவர் மரப்பெட்டியையும் உள்ளே இருந்த குழந்தையான சசியினையும் கண்டெடுத்தார். சலவைத் தொழிலாளி குழந்தை கடவுளின் ஆசீர்வாதம் என்று நம்பி அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவருக்குச் சொந்தக் குழந்தைகள் இல்லாததால், இவளைத் தத்தெடுக்க முடிவு செய்தார்.

சசி

சசி சொர்க்கத்தின் தேவதைகளைப் போல அழகாக வளர்ந்தார். இவளின் அழகைப் பற்றிய செய்திகள் புன்னுவை எட்டியது. சசியை சந்திக்க புன்னு ஆசைப்பட்டான். எனவே அழகான இளம் இளவரசரான புன்னு பாம்போருக்கு பயணம் செய்தார். இளவரசர், சசியின் தந்தைக்கு (சலவைத் தொழிலாளி) தனது ஆடைகளை அனுப்பினார். இதனால் புன்னு சசியைப் பார்க்க முடியும் என நம்பினார். புன்னு சலவைத் தொழிலாளியின் வீட்டிற்குச் சென்றபோது, சசியும் புன்னும் முதல் பார்வையில் காதலித்தனர். சசியின் தந்தை, சசி ஒரு சலவைத் தொழிலாளியைத் திருமணம் செய்து கொள்வார், வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில் மனமுடைந்தார். சலவைத் தொழிலாளியாகத் தேர்வில் தேர்ச்சி பெற்றுத் தான் சசிக்குத் தகுதியானவர் என்பதை நிரூபிக்குமாறு புன்னுவிடம் தெரிவித்தார். புன்னு தன் காதலை நிரூபிக்க ஒப்புக்கொண்டான். போட்டியில் துணியினைத் துவைக்கும் போது, தான் ஒரு இளவரசனாக இருந்ததால், துணிகளைத் துவைப்பதில் அனுபவம் இல்லாததால், அனைத்து ஆடைகளையும் கிழித்துவிட்டார். இதனால் ஒப்பந்தத்தைத் தவறவிட்டார். ஆனால் தான் அந்த ஆடைகளைத் திருப்பித் தருவதற்கு முன்பு, கிராமவாசிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நம்பி, அனைத்து ஆடைகளின் பைகளிலும் தங்கக் காசுகளை மறைத்து வைத்தார். தந்திரம் பலனளித்தது, சசியின் தந்தை திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

புன்னுவின் சகோதரர்கள்[தொகு]

புன்னுவின் தந்தை மற்றும் சகோதரர்கள் சசியுடனான (புன்னு ஒரு இளவரசன் மற்றும் அவள் ஒரு சலவைத் தொழிலாளியின் மகள்) திருமணத்திற்கு எதிராக இருந்தனர், எனவே, தங்கள் தந்தைக்காக, புன்னுவின் சகோதரர்கள் பாம்போருக்கு பயணம் செய்தனர். முதலில் புன்னுவை மிரட்டினார்கள். ஆனால் அவன் புன்னு இத்திருமணத்தில் உறுதியாக இருந்ததால், இன்னும் பல தந்திரமான முறைகளை மேற்கொண்டனர். புன்னுவின் சகோதரர்கள் திருமணத்தினை ஆதரிப்பதைப் போன்று நடித்தனர். இதனை அறியாத புன்னு முதல் இரவில், அவர்களுடன் திருமண கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அவர்கள் வழங்கிய பலவகையான ஒயின்களைக் குடித்தான். புன்னு போதையிலிருந்தபோது சகோதரர்கள் புன்னுவை ஒட்டகத்தின் மூலம் சுமந்துகொண்டு தங்கள் சொந்த ஊரான கெச்க்குத் திரும்பினர்.

இறப்பில் சந்திக்கும் காதலர்கள்[தொகு]

மறுநாள் காலையில் சசி எழுந்ததும், தான் தன் மைத்துனர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாள். காதலனைப் பிரிந்த சோகத்தால் அவள் வெறுங்காலுடன் கெச் மக்ரான் நகரத்தை நோக்கி ஓடினாள். கெச் மக்ரான் நகரை அடைய, அவள் பாலைவனத்தில் பல மைல்கள் கடக்க வேண்டியிருந்தது. தனியாக, அவள் காலணியின்றி பயணித்த அவள் கால்களில் கொப்புளங்கள் மற்றும் உதடுகள் "பன்ன்ஹுன், புன்ஹுன்!" என்று அழுவதால் வறண்டு போயின. இந்தப் பயணம் ஆபத்தான ஆபத்துகள் நிறைந்ததாக இருந்தது. மேய்ப்பன் ஒருவன் குடிசையிலிருந்து வெளியே வருவதைக் கண்ட அவள் தாகமாக இருந்ததைத் தெரிவித்து தண்ணீர் கேட்டாள். அவளுக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தான். அவளின் அசாத்திய அழகைப் பார்த்தவன் சசியினைப் பலவந்தப்படுத்த முயன்றான். சசி தப்பித்து அவனிடமிருந்து மறைய கடவுளிடம் வேண்டினார். கடவுள் அவளது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நிலம் குலுங்கியது மற்றும் பிளவுபட்டது. சசி மலைகளின் பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்டார். புன்குன் மெமக்ரானில் எழுந்தபோது பாம்போருக்குத் திரும்பி ஓடினான். வழியில் "சசி, சசி!" எனக் கத்திக்கொண்டே சென்றார். இதனைக்கண்ட மேய்ப்பன் புன்குன்னிடம் நடந்ததைச் சொன்னான். புன்குனும் அதே பிரார்த்தனையைச் செய்தான். நிலம் குலுங்கி மீண்டும் பிளந்தது, சசியின் புதைக்கப்பட்ட அதே மலைப் பள்ளத்தாக்கில் புன்குன்னும் புதைக்கப்பட்டார். இந்த பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற கல்லறை இன்னும் உள்ளது. ஷா அப்துல் லத்தீப் பிட்டாய் இந்த வரலாற்றுக் கதையைத் தனது சூஃபி கவிதையில் நித்திய அன்பு மற்றும் தெய்வீகத்துடன் இணைவதற்கு உதாரணமாகப் பாடுகிறார். ஆனால் ஹாஷிம் (கவிஞர்) (ஹாஷிம் ஷா) எழுதிய புகழ்பெற்ற கதையின்படி, பாலைவனத்தைக் கடக்கும்போது சசி இறந்துவிடுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

கெச்சு மாக்ரன் என்பது பாக்கித்தானின் பலுச்சிசுதானில் மாக்ரன் கடற்கறைச் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள புன்குன் கோட்டை 6000-8000 பொ. ஊ. முன்னர் கட்டப்பட்டது.

சசி புன்குனின் கல்லறைகள்[தொகு]

சசி மற்றும் புன்னுவின் கல்லறைகள் கராச்சிக்கு மேற்கே 45 மைல் தொலைவில் பலுச்சிசுதானின் லாஸ்பேலாவிற்கு அருகில் அமைந்துள்ளன.[2]

திரைப்படம்[தொகு]

இந்த நாட்டுப்புறக் கதை பல முறை திரைப்படமாக்கப்பட்டது:

  • சசி புன்னு (1928), ஹர்ஷத்ராய் சாகர்லால் மேத்தாவின் இந்திய அமைதியான படம் ; விட்டல் மற்றும் ஜெபுனிசா நடித்துள்ளனர். [3]
  • சசி புன்னு (1932), எஸ். ஆர். ஆப்தே மற்றும் சிமன்லால் லுஹார் ஆகியோரின் இந்திய இந்தி மொழித் திரைப்படம்; ஈடன் பாய் மற்றும் ஹைதர் பாண்டி நடித்துள்ளனர். [3]
  • சசி புன்னு (1946), ஜகத்ராய் பேசுமால் அத்வானியின் இந்திய இந்தி மொழித் திரைப்படம்; எடி பில்லிமோரியா மற்றும் கீதா நிஜாமி நடித்துள்ளனர். [3]
  • சசி புன்னு (1958), சையத் ஏ. ஹாரூன் தயாரித்த அக்பர் அலி இயக்கிய பாக்கித்தானி சிந்தி மொழித் திரைப்படம்.
  • சாஸ்ஸி புன்ஹோ (1960), ராம் ரசிலா இயக்கிய இந்திய சிந்தி மொழித் திரைப்படம். [4]
  • சாஸ்ஸி புன்னு (1965), சாந்தி பிரகாஷ் பக்ஷியின் இந்தியப் பஞ்சாபி மொழித் திரைப்படம். [3]
  • சசி புன்னு (1983), சதீஷ் பக்ரி இயக்கிய இந்திய பஞ்சாபி மொழித் திரைப்படம், சதீஷ் கவுல் மற்றும் பாவனா பட் நடித்தனர்.
  • சாஸ்ஸி புன்னோ (2004), ஹாசன் அஸ்காரி இயக்கிய பாக்கித்தான் உருது திரைப்படம்.

இசை[தொகு]

இங்கிலாந்து இசைக்கலைஞர் பஞ்சாபி எம். சி. தனது 2003ஆம் ஆண்டு பாடலான ஜோகியில் சசியின் கதையைக் குறிப்பிடுகிறார்.[5] "கிங் ஆப் கவ்வாலி", உஸ்தாத் நுசுரத் பதே அலி கான், கவிஞர் நாஸ் கியால்வியால் எழுதப்பட்ட இவரது மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான தும் ஏக் கோரக் தண்டா ஹோவின் வசனத்தில் சசியைக் குறிப்பிடுகிறார். பாக்கித்தானிய பாடகர்-பாடலாசிரியர் பிலால் சயீத் தனது 12 சால் பாடலில் சசியைக் குறிப்பிடுகிறார்.

இலக்கியம்[தொகு]

சசுய் புனோ என்பது இந்திய எழுத்தாளர் ராம் பஞ்வானியால் சிந்தி மொழியில் எழுதப்பட்ட நாடகம்.[6]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சிந்துவின் கல்லறை ஓவியங்கள்
  • திரிலோக் சிங் சித்தார்கர் 1954 இல் சசுய் புன்ஹுனின் அழகிய ஓவியத்தை உருவாக்கினார்.
  • ஸ்ரீ சரித்ரோபாக்கியன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr.Nabi Bux Khan Baloach (1976). Popular Folk Stories:Sassui Punhun. Hyderabad, Sindh, Pakistan: Sindhi Adabi Board.
  2. "The Eternal Love of Sassi Punnu". goodtimes.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  3. 3.0 3.1 3.2 3.3 Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1999). Encyclopaedia of Indian cinema. British Film Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780851706696. பார்க்கப்பட்ட நாள் 12 August 2012.
  4. "Sassi Punho (1960)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  5. "Jogi - ascetic". lyricstranslate.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-27.
  6. "Drama - Professor Ram Panjwani". rampanjwani.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசுய்_புன்குன்&oldid=3655649" இலிருந்து மீள்விக்கப்பட்டது