கன்னியாகுமரி மும்பை விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னியாகுமரி மும்பை விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
நிகழ்வு இயலிடம்மகாராட்டிரம், கருநாடகம், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளம்
முதல் சேவை26 சனவரி 1973; 51 ஆண்டுகள் முன்னர் (1973-01-26)[1][2] (ஆரம்ப சேவை புது தில்லி மற்றும் எர்ணாகுளம்/மங்களூர்)[3]
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்கன்னியாகுமரி
இடைநிறுத்தங்கள்61/60
முடிவுபுனே
ஓடும் தூரம்2,135 km (1,327 mi)
சராசரி பயண நேரம்44 மணி
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்16381 / 16382
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிரூட்டப்பட்ட 2 அடுக்கு, குளிரூட்டப்பட்ட 3 அடுக்கு, தூங்கும் வசியுடைய சாதாரண வகுப்பு, பொதுப் பெட்டிகள்
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்ஆம்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வே
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்46.62 km/h (29 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

மும்பை கன்னியாகுமரி வழித்தடம்

கன்னியாகுமரி-மும்பை விரைவுவண்டி (Kanyakumari–Mumbai Express) அல்லது ஜெயந்தி ஜனதா விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேக்கு சொந்தமான ஒரு விரைவு தொடருந்து ஆகும். இது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தொடருந்து நிலையத்திலிருந்து மகாராட்டிர மாநிலம் புனேயில் உள்ள புனே சந்திப்பு தொடருந்து நிலையம் இடையே இயக்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மும்பையிலிருந்து தென்னிந்தியாவிற்குச் செல்லும் முதல் மற்றும் பழமையான தொடருந்து சேவை இதுவாகும். ஆரம்பத்தில் விக்டோரியா முனையம் (மும்பை சிஎஸ்டி) முதல் கொச்சி துறைமுக முனையத்திற்கு இந்த சேவை செயல்பட்டு வந்தது. பின்னர் அது திருவனந்தபுரம், பின்னர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி என நீட்டிக்கப்பட்டது.

2020 முதல், பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணையின்படி, இது புனே வரை மட்டுமே இயங்குகிறது. தொற்றுநோய்களின் போது சேவைகள் நிறுத்தப்பட்ட பின்னர், 31 மார்ச் 2022 அன்று புனேவிற்குத் தொடருந்து தனது முதல் ஓட்டத்தை மேற்கொண்டது. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட தொடருந்து பெட்டிகளுக்குப் பதிலாக இணைப்பு ஹாப்மேன் புஷ் (LHB) பெட்டிகளுடன் தொடருந்து இயங்கியது.[4]

இழுவை[தொகு]

முழு வழித்தடமும் இப்போது மின் மயமாக்கப்பட்டதால், இந்த தொடருந்து இப்போது கே.ஒய்.என். (KYN) அடிப்படையிலான டபுள்யூ.ஏ.பி.-7 (WAP-7) மூலம் இரு திசைகளிலும் இழுத்துச் செல்லப்படுகிறது.

வண்டி எண், பயண நேரம்[தொகு]

16382 கன்னியாகுமரி - புனே தொடருந்து 2135 கிலோமீட்டர் தூரத்தை 47 மணி 05 நிமிடங்களில் (45.35 கிமீ/மணி) கடக்கின்றது. இதே தூரத்தினை 44 மணி நேரம் 30 நிமிடங்களில் (47.98 கிமீ/மணி) 16381 புனே-கன்னியாகுமரி விரைவுவண்டியாகக் கடக்கிறது.

வழித்தடம்[தொகு]

கன்னியாகுமரியியிலிருந்து நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் மத்தி, கொல்லம் சந்திப்பு, காயம்குளம் சந்திப்பு, செங்கனூர், எர்ணாகுளம் சந்திப்பு, ஓட்டப்பாலம் தொடருந்து நிலையம், பாலக்காடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, பாகால சந்திப்பு, திருப்பதி, ரேணிகுண்டா சந்திப்பு வழியாக இயக்கப்படுகிறது. யர்ரகுன்ட்லா சந்திப்பு, கூடி சந்திப்பு, குண்டக்கல் சந்திப்பு, ராய்ச்சூர் சந்திப்பு, வாடி சந்திப்பு, கலபுர்கி சந்திப்பு, குர்துவாடி சந்திப்பு, டவுண்ட் சந்திப்பு, வழியாகப் புனே சந்திப்பினை அடைகின்றது.

கன்னியாகுமரி செல்லும் பயணத்தில் சாலக்குடி, இரிஞ்ஞாலகுடா, வடக்காஞ்சேரி மற்றும் ஒற்றப்பாலம் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டுள்ளது. திரும்பும் போது இந்த நிலையங்களில் இத்தொடருந்து நிற்காது. புனேவுக்குத் திரும்பும் பயணத்தில், இந்த தொடருந்து திரிபுனித்துரா மற்றும் திருவனந்தபுரம் பேட்டையில் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Story of the Legendary Big Four of the South". 24 Coaches. 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
  2. Dheleepan G V (2014). "History of great Indian Railways". slide share.
  3. "Railway Budget speech 1973-74" (PDF). www.indianrailways.gov.in. இந்திய அரசு, Ministry of Railways. 20 February 1973.
  4. 4.0 4.1 "After 2 years, Jayanti Janata Express resumes operation, to terminate at Pune". English.Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-03.

வெளி இணைப்புகள்[தொகு]