அஜாதசத்துரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி அஜாத சத்ரு, அஜாதசத்ரு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
சி தானியங்கிஇணைப்பு: ml:അജാതശത്രു |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
[[it:Ajātashatru]] |
[[it:Ajātashatru]] |
||
[[ja:アジャータシャトル]] |
[[ja:アジャータシャトル]] |
||
[[ml:അജാതശത്രു]] |
|||
[[pl:Ajatashatru]] |
[[pl:Ajatashatru]] |
||
[[pt:Ajatashatru]] |
[[pt:Ajatashatru]] |
17:50, 20 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
அஜாதசத்ரு (சமஸ்கிருதம் अजातशत्रु) வட இந்தியாவிலிருந்த மகதத்தை கிமு 491-கிமு 461வரை ஆண்ட அரசன்.
பழங்காலத்து பௌத்த பாளி குறிப்புகளில் இவனைப்பற்றி அறிய முடிகிறது. இவன் தனது தந்தை பிம்பிசாரனைக் கொண்று மகதத்தின் அரியாசனத்தை அடைந்ததின் மூலம் மகதம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டான். இதைப்பற்றி பௌத்த நூலான சமாதான சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவன் புத்தரின் ஒருகாலத்தவன். அப்பொழுது புதிதாக தோன்றிய பௌத்தமும், அதன் சங்கமும் இவனது ஆதரவினால் மகதத்தில் செழிப்புடன் வளர்ந்தது. இவன் தனது தந்தையை கொல்லாமல் இருந்திருந்தால் பௌத்தத்தில் ஒரு நிலையான சோத்பன்னத்தை அடைந்திருப்பானென்று புத்தர் சமனபால சுத்தாவில் கூறியுள்ளார்.
வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பரின் கூற்றுப்படி, பாட்னா எனும் நகரம் உருவாக காரணமாயிருந்திருக்கிறான், மகதத்தின் தலைநகரமான ராஜ்கிரின் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறான். மகதத்தின் அரியாசனத்தை அடைய தனது தந்தை பிம்பிசாரனைக் கொண்றான். தனது அண்டை நாடுகளான கோசலத்தையும், காசியையும் வென்று மகத்துடன் இனைத்துக்கொண்டான். தற்போதய பீகார் மற்றும் நேபாளத்திலிருந்த விரிச்சி கூட்டரசுடன் பதினாறாண்டுகள் போர் புரிந்தான்.
கோர் விடால் எழுதிய புதினமான கிரியேஷனில், இவனை ஆற்றல் மிக்க கொடுங்கோண் அரசனாகவும், சிறார்களிடம் பாலியல் ஆர்வமுள்ளவனாகவும் சித்தரித்துள்ளார்.
மேலும் படிக்க
குறிப்புகள
- ரொமிலா தாப்பர், 1996. A History of India (Volume One). Oxford University Press.