திருவள்ளுவர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி '''நீதி இலக்கியமாகும்'''. and cleanup |
சி →திருவள்ளுவர் சிலையின் அளவுகள்: cleanup |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
== திருவள்ளுவர் சிலையின் அளவுகள் == |
== திருவள்ளுவர் சிலையின் அளவுகள் == |
||
[[படிமம்:Thiruvalluvar_Statue_at_Night.JPG|thumb|இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை]] |
[[படிமம்:Thiruvalluvar_Statue_at_Night.JPG|thumb|இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை]] |
||
சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரம் 95 அடி. மொத்த உயரம் 133 அடி. |
சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரம் 95 அடி. மொத்த உயரம் 133 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவரும், அணிமணி மண்டபமும் அமைந்துள்ளன. |
||
சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவரும், அணிமணி மண்டபமும் அமைந்துள்ளன. |
|||
== சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம் == |
== சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம் == |
12:08, 3 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
திருக்குறள், மனிதகுலம் என்றென்றும் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும்.
அத்தகைய நெறிகளை அறம், பொருள், காமம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களாக 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளியவர் திருவள்ளுவர் அவரைக் காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழத் திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
திருவள்ளுவர் சிலையின் அளவுகள்
சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரம் 95 அடி. மொத்த உயரம் 133 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவரும், அணிமணி மண்டபமும் அமைந்துள்ளன.
சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம்
பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் காமத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆம். அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலைக்கான கற்களை ஈந்த மலைகள்
சிறுதாமூர், பட்டுமலைக் குப்பம் மலைகள், அம்பா சமுத்திரம் மலைகள்.
சிலை பற்றிய முக்கிய விவரங்கள்
- சிலையின் உயரம் - 95 அடி
- பீடத்தின் உயரம் - 38 அடி
- சிலையும் பீடமும் சேர்ந்து - 133 அடி
- முகத்தின் உயரம் - 10 அடி
- உடல் பகுதியின் உயரம் - 30 அடி
- தொடைப் பகுதியின் உயரம் - 30 அடி
- கால் பகுதியின் உயரம் - 20 அடி
- உச்சந்தலை, கழுத்து, முட்டி மற்றும் பாதமும் சேர்ந்து - 10 அடி
- கைத்தலம் - 10 அடி
- சுவடியின் நீளம் - 10 அடி
- தோள்பட்டையின் அகலம் - 30 அடி
- சிகைப் பகுதி - 5 அடி
- ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுச்சுவர் - 60அடி * 50அடி
- ஒவ்வொன்றும், ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் கொண்ட 10 யானைகள்.
- ஆதார பீடம், சிலை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவற்றின் மொத்த எடை 7000 டன்.