ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:ஆலப்புழா
அமைவு:செங்கனூர்
கோயில் தகவல்கள்

ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில் (Anandeshwaram Mahadeva Temple) இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தின் செங்கனூர் வட்டத்திலுள்ள பாண்டநாட்டில் அமைந்துள்ளது. இந்த கோயில் செங்கனூருக்கு மேற்கே 6 கிமீ (3.7 மைல்) தொலைவிலும், மன்னருக்கு கிழக்கே 4 கிமீ (2.5 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒரு இந்துக் கோயிலான இந்த ஆலயம் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் முன்பு பம்பை ஆற்றங்கரையில் இருந்தது. ஆற்றின் ஓட்டத்தின் மாற்றப்பட்ட திசையால் அது அழிக்கப்பட்டது.[1][2][3] பின்னர், இந்த தெய்வம் அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. மேல்யம், ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில் என்றும் அழைக்கப்பட்டது. வஞ்சிபுழா மடம் முன்னர் இதை நிர்வகித்து வந்தது.

முக்கிய நாட்கள்[தொகு]

மகா சிவராத்திரி: கும்ப மாதத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாகும்.

சப்தாக யக்னம்: ஒவ்வொரு ஆண்டும் சப்தாகம் 7 நாட்கள் பிரார்த்தனையுடனும், பக்தர்களுக்கு பிரசாத விநியோகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

நவாக யகனம்: ஒவ்வொரு ஆண்டும் 'நவாக யக்னம்' 9 நாட்கள் பிரார்த்தனையுடனும், பக்தர்களுக்கு பிரசாத விநியோகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

பரையெடுப்பு: மகா சிவராத்திரிக்கு முன்னதாக, பண்டிகை காலத்தில் பரையெடுப்பு நடக்கிறது. பாண்டநாடு பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு மகாதேவரன் வருகை தருவதாக நம்பப்படுகிறது.

துணை தெய்வங்கள்[தொகு]

மற்ற இந்துக் கோவில்களைப் போலவே, இங்கும் மற்ற தெய்வங்களின் சிவாலயங்கள் உள்ளன. இந்த தெய்வங்களில் மகா விஷ்ணு, பார்வதி, புவனேஸ்வரி, பிள்ளையார், சாஸ்தா, யக்சியம்மா, நாக தேவதை போன்றவை உள்ளது

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TEMPLES OF ALAPPUZHA". keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
  2. "Temples in Kerala, India". hinduonline.co. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.