20கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
20கள் (20s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் மூன்றாம் பத்தாண்டைக் குறிக்கும்.
இக்கட்டுரை கிபி 20–29 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 20 முதல் 29 ஆண்டுகளைப் பற்றியது. 20களில் நடந்த நிகழ்வுகள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
20[தொகு]
- செர்வியசு கால்பா உரோமைக் குற்றவியல் நடுவராகப் பதவியில் இருந்தார்.
- உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசின் படுகொலை குறித்த விசாரணைக்கு பேரரசன் திபேரியசு உத்தரவிட்டார். தாம் குற்றவாளியாகக் காணப்படுவோமோ என்ற பயத்தினால் உரோமை அரசியல்வாதியும், சிரியாவின் ஆளுநருமான கினாயசு கல்பூர்னியசு பீசோ தற்கொலை செய்து கொண்டான்.
21[தொகு]
- ரோமப் பேரரசு:
- யூலியசு புளோரசு, யூலியசு சாக்ரோவிர் ஆகியோரின் கீழ் எதூயி கிளர்ச்சியில் இறங்கினான். இக்கிளர்ச்சி முறியடிக்கப்படது.
- திபேரியசு பேரரசன் உரோமைத் தூதனாக நான்காம் தடவையாக நியமிக்கப்பட்டான்.
- உரோமர்கள் தெற்கு சிலோவாக்கியாவில் குவாதி பிரதேசத்தில் ஒரு இடைக்கால அரசை நிறுவினர்.
- உரோமில் எழுதுகோல்கள், உலோக எழுது கருவிகளும் உருவாக்கப்பட்டன.