வேலப்பாடி வரதராஜப்பெருமாள் கோயில்
அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | வேலூர் |
அமைவிடம்: | பெருமாள் கோவில் தெரு, வேலூர், வேலப்பாடி, வேலூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | வேலூர் |
மக்களவைத் தொகுதி: | வேலூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | வரதராஜபெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஸ்ரீ வைகுண்ட ஏகாதிசி(1 நாட்கள்), நவராத்திரி (10 நாட்கள்) |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வேலப்பாடி வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், வேலப்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், விநாயகர், ஆண்டாள், பெருந்தேவிதாயார், கஜலட்சுமி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி பிரம்மோற்சவம்(10 நாட்கள்) மாதம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதிசி(1 நாட்கள்) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நவராத்திரி (10 நாட்கள்) திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாதிச் சனி ( 5 நாட்கள்) தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)