வனப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வனப்பு என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் வனப்பியல் எனக் குறிப்பிட்டு அதனை எட்டு வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. அந்த வனப்புகள் இங்குத் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. [1]

எண்வகை வனப்புகளில் அமையும் நூல்களுக்குச் சான்றுகள் :

1) அம்மை - திருக்குறள் , ஆத்திசூடி.

2) அழகு - நெடுந்தொகை போன்றவை

3) தொன்மை - சிலப்பதிகாரம் (நச்சினார்க்கினியர்), இராம சரிதம், தகடூர் யாத்திரை.

4) தோல் - மலைபடுகடாம் (இளம்பூரணர்)

5) விருந்து - முத்தொள்ளாயிரம் (பேராசிரியர்)

6) இயைபு - மணிமேகலை, பெருங்கதை

7) புலன் - முக்கூடற்பள்ளு, குறவஞ்சி, ஏற்றப்பாட்டு, குழந்தைப் பாடல்கள்

8) இழைபு -கலித்தொகை, பரிபாடல் (பேராசிரியர்)

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம், செய்யுளியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனப்பு&oldid=3415630" இலிருந்து மீள்விக்கப்பட்டது