இழைபு (நூல்வனப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இழைபு என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று.

ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து இயைந்து வராமல் பாடி நூல் இயற்றுவது இழைபு என்னும் நூல்-வனப்பு ஆகும்.
அதாவது க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற – என வரும் சொற்கள் பாடலில் வராமல் நூல் செய்வது இந்த நூல்-வனப்பு.
இது இருசீர்-அடி, முச்சீர்-அடி, நாற்சீர்-அடி, ஐஞ்சீர்-அடி, அறுசீர்-அடி, எழுசீர்-அடி கொண்ட பாடல்களால் அமைந்திருக்கும். [1]

பேராசிரியர் கருத்து
இது இசைப்பாட்டு என்னும், இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றும், இழைபு அவிநயத்துக்கு உரியது என்றும், பேராசிரியர் குறிப்பிடுகிறார். ‘கலியும் பரிபாடலும் போலும்’ என எடுத்துக்காட்டும் தருகிறார்.
இளம்பூரணர் கருத்து
குறளடி முதல் ஐந்தடி என்பது 4-எழுத்து அடி முதல் 17-எழுத்து அடி வரையில் உள்ள 5 வகைப் பாடலடி
இளம்பூரணர் மேற்கோள் பாடலின் பகுதி
போந்து போந்து சார்ந்து சார்ந்து
தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
வண்டு சூழ விண்டு நீங்கி
நீர்வாய்க் கொண்ட நீலம் ஊர்வாய்
ஊதை வீச ஊர வாய
மணியேர் நுண்தோள் ஒல்கி மாலை
நன்மணம் கமழும் பன்னல் ஊர!

இழைபு-நூல் பாடல் இவ்வாறு இருக்கும்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது
    குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து
    ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின்
    இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். – தொல்காப்பியம், செய்யுளியல் 234
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழைபு_(நூல்வனப்பு)&oldid=3305021" இலிருந்து மீள்விக்கப்பட்டது