ராணி சென்னம்மா விரைவுவண்டி
தோற்றம்
| ராணி சென்னம்மா விரைவுத்தொடர்வண்டி | |
|---|---|
| கண்ணோட்டம் | |
| வகை | விரைவுத்தொடர்வண்டி |
| நிகழ்நிலை | பயன்பாட்டிலுள்ளது |
| நடத்துனர்(கள்) | தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) |
| வழி | |
| தொடக்கம் | பெங்களூர் (SBC) |
| இடைநிறுத்தங்கள் | 29 |
| முடிவு | கோலாப்பூர் (CSMT) |
| ஓடும் தூரம் | 796 கி.மீ |
| சராசரி பயண நேரம் | 16 மணி 25 நிமி (மேலாக), 16 மணி 40 நிமி (கீழாக) |
| சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
| தொடருந்தின் இலக்கம் | 16589/16590 |
| பயணச் சேவைகள் | |
| வகுப்பு(கள்) | குளிர்பதன முதல்வகுப்பு, குளிர்பதன இருவரிசை, குளிர்பதன மூவரிசை, துயிலுறை வசதி வகுப்பு, ஒதுக்கப்பெறாதது |
| இருக்கை வசதி | உள்ளது |
| படுக்கை வசதி | உள்ளது |
| உணவு வசதிகள் | இல்லை |
| சுமைதாங்கி வசதிகள் | உள்ளது |
| தொழில்நுட்பத் தரவுகள் | |
| பாதை | அகலப் பாதை |
| வேகம் | மணிக்கு 47 கி.மீ |
ராணி சென்னம்மா விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் தென்மேற்கு தொடருந்து மண்டலத்தில் இயக்கப்படும் ஒரு விரைவுத்தொடர்வண்டி. கருநாடகத்தின் பெங்களூர் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரங்களுக்கிடையே நாள்தோறும் இயக்கப்படும் இத்தொடர்வண்டி பெளகாவி, லோண்டா, ஹுப்பள்ளி, ஆவேரி, தாவண்கரே, பீருர், அர்சிகெரே, தும்கூர் உள்ளிட்ட நகரங்களினூடாகப் பயணிக்கின்றது.
கிட்டூரைத் தலைமையிடமாகக் கொண்டு வடக்கு கருநாடகத்தின் பெரும்பகுதியை ஆண்ட ராணி சென்னம்மாவின் பெயரால் வழங்கப்படும் இத்தொடர்வண்டி ஏறத்தாழ பதினாறரை மணி நேரத்தில் 796 கி.மீ தொலைவைக் கடக்கிறது.