மூன்று இராச்சியங்கள் (சீனா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

மூன்று இராச்சியங்கள் (The Three Kingdoms) என்பது கிபி 220 இருந்து 280 வரையான சீனாவின் வரலாற்றுக் காலப் பகுதி ஆகும். ஆன் அரசமரபின் வீழ்ச்சியுடன் தொடங்கும் மூன்று இராச்சியங்களின் காலப் பகுதி, இக் காலப் பகுதியின் கடைசி வு இராச்சியம் jin அரசமரால் கைப்பற்றப்படும் வரையான காலப் பகுதி ஆகும். சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் காலப் பகுதியின் தொடக்கத்தை 180 நிகழ்ந்த மஞ்சள் தலைப்பாய் புரட்சியில் இருந்து வரையறை செய்வர்.

இந்தக் காலப் பகுதியில் இன்றைய சீனாவின் பெரும் பகுதி மூன்று இராச்சியங்களாக இருந்தது. வேய் (Wei, 魏),, சூ (Shu, 蜀), வூ (Wu 吳) என்பவை அவை ஆகும். சீனாவில் மிகவும் கடுமையான போர்கள் நடந்த காலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தச் சிறு காலப் பகுதி சீன, யப்பானிய, கொரிய, வியட்நாமிய இலக்கியத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இவற்றுள் மிகவும் அறியப்பட்ட நூல் மூன்று இராச்சியங்களின் கதை (Romance of the Three Kingdoms) ஆகும்.

இந்தக் காலப் பகுதியில் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நடந்தன. சூகே லியாங் மர எருமையை உருவாக்கினார். தொடர் சதுர-வில் என்ற ஆயுதத்தை செப்பமாக்கினார். மா-யுன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார். இவர் நீர் ஆற்றலில் இயங்கும் பொம்மைகளை உருவாக்கினார். நீர்ப்பாய்ச்சலுக்கு சதுர மேடைச் சங்கிலி பம்பியைக் கண்டுபிடித்தார். இவர் மிக முன்னேற்றகரமான தென்சுட்டுத் தேர் என்பதையும் உருவாக்கினார்.