முதலாம் அலி அதில் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் அலி அதில் ஷா
Sultan
ஆட்சிக்காலம்1558–1579
முன்னையவர்முதலாம் இப்ராகிம் அதில் ஷா
பின்னையவர்இரண்டாம் இப்ராகிம் அதில் ஷா
இறப்பு17 ஆகஸ்ட் 1579[1]
பிஜப்பூர் சுல்தானகம்
புதைத்த இடம்
அலி கா ரௌசா
துணைவர்சாந்த் பிபி
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் இப்ராகிம் அதில் ஷா (தத்தெடுக்கப்பட்டவர்)
பெயர்கள்
அபுல் முசாபர் அலை அதில் ஷா
மரபுஅலி வம்சம்
அரசமரபுபிஜப்பூர் சுல்தானகம்
தந்தைமுதலாம் இப்ராகிம் அதில் ஷா
தாய்Dஆசாத் கான் லாரியின் மகள்
மதம்சியா இசுலாம்

முதலாம் அலி அதில் ஷா ( Ali Adil Shah I ; 1558-1579) பிஜப்பூர் சுல்தானகத்தின் ஐந்தாவது சுல்தான் ஆவார்.

இவரது முடிசூட்டு நாளில், அலி சுன்னி நடைமுறைகளை கைவிட்டு, சியா குத்பா மற்றும் பிற நடைமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்தினார். பாரசீக மத மருத்துவர்களுக்கு சியா கோட்பாட்டைப் போதிக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. மேலும், அவர்களின் மத நடவடிக்கைகளுக்காக அரசால் ஊதியம் வழங்கப்பட்டது.

திருமணம்[தொகு]

அகமதுநகரைச் சேர்ந்த நிஜாம் ஷாஹியின் மகள் சாந்த் பிபி என்ற புகழ்பெற்ற பெண் வீராங்கனையை மணந்தார். 1595ஆம் ஆண்டில் அக்பர் பேரரசரின் முகலாயப் படைகளுக்கு எதிராக அகமதுநகரைப் பாதுகாப்பதில் சாந்த் பிபி மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். [2]

ஆட்சி[தொகு]

அலியின் ஆட்சியின் போது பிஜப்பூர் மற்றும் விஜயநகரம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருந்தன. அலி ஒருமுறை விஜயநகரத்துக்கு சென்றபோது அங்கு அலிய ராம ராயன் மிகுந்த ஆடம்பரத்துடனும் மரியாதையுடனும் வரவேற்றார். 1565 ஆம் ஆண்டில், பேரரசின் முக்கிய தளபதி என்ற வகையில் தக்காணத்துச் சுல்தான்களான உசேன் நிசாம் ஷா, முதலாம் அலி அதில் ஷா, இப்ராகிம் குதுப் ஷா ஆகியோரின் கூட்டுப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தலைக்கோட்டைப் போரில் தானே தலைமை தாங்கினான். மிகப் பெரிய படை பலத்தைக் கொண்ட விஜயநகரப் பேரரசுக்கு இலகுவாக வெற்றி கிடைக்கும்போல் தோற்றிய இப் போர், எதிர்பாராத விதமாக, அலிய ராம ராயன் பிடிபட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களுக்குப் பேரழிவாக முடிந்தது. இந்தத் தாக்கத்திலிருந்து விஜயநகரப் பேரரசு ஒருபோதும் மீளவே இல்லை. விஜயநகரம் எதிரிப் படைகளினால் பெரும் அழிவுக்குள்ளானது. நகர மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தினரும் அழிக்கப்பட்டனர். இந்த போரின் விளைவாக, பிஜப்பூரின் தெற்கு எல்லையானது விஜயநகரம் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் அது மேலும் தெற்கே பிஜப்பூரின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாயில்களைத் திறந்தது. இதன் விளைவாக, அலியின் ஆட்சியின் முடிவில், பிஜப்பூர் இராச்சியம் மேற்கு கடற்கரையில் ஹொனாவர் துறைமுகம் வரை விரிவடைந்தது. மேலும் தெற்கு எல்லை வரதா மற்றும் துங்கபத்ரா வழியாக நீட்டிக்கப்பட்டது.

வளர்ச்சிகள்[தொகு]

அலியின் ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசர் அக்பருடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு தூதர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.

பின்வந்தவர்[தொகு]

1579 ஆம் ஆண்டில், அலிக்கு மகன் இல்லாததால், இவரது மருமகன் இப்ராகிமை தனது சகோதரர் தகாமாசிப்பின் மகனாக நியமித்தார். அதே ஆண்டில், அலி ஒரு திருநங்கையாக்கப்பட்ட ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். [3] பீஜாப்பூரில் உள்ள சகாப் ரௌசாவிற்கு அருகிலுள்ள அலி கா ரௌசாவில் அடக்கம் செய்யப்பட்டார்.

சான்றுகள்[தொகு]

  1. Page 2 of Translator's Preface in the book Tohfut-ul-mujahideen: An Historical Work in the Arabic Language originally written by Zayn al-Dīn b. ʿAbd al-ʿAzīz al- Malībārī (Translated into English by Lt. M.J. Rowlandson
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 118–119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  3. Tohfut-ul-mujahideen: An Historical Work in the Arabic Language By Zayn al-Dīn b. ʿAbd al-ʿAzīz al- Malībārī (Translated into English by Lt. M.J. Rowlandson)
  • Wakiyate Mamlakate Bijapur by Basheeruddin Dehelvi.
  • Tareekhe Farishta by Kasim Farishta
  • External Relation of Bijapur Adil Shahis.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அலி_அதில்_ஷா&oldid=3815725" இலிருந்து மீள்விக்கப்பட்டது