மிருதங்க சைலேசுவரி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிருதங்க சைலேசுவரி கோயில்

மிருதங்க சைலேசுவரி கோயில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் முழக்குன் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில் ஆகும்.[1] விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகின்ற பண்டைய கேரளாவின் 108 துர்கா கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் மிருதங்க சைலேசுவரி நான்கு கைகளைக்கொண்ட துர்க்கை ஆவார். இரண்டு கைகளில் சங்கும், சக்ரமும் கொண்டுள்ளார். முன் வலது கை பக்தர்களை ஆசீர்வதிக்கும் நிலையிலும், முன் இடது கை இடுப்பில் வைத்துள்ள நிலையிலும் காணப்படுகிறது.

வடிவங்கள்[தொகு]

இந்து மதத்தில் துர்க்கையானவர் மூன்று முக்கிய வடிவங்களானமகா துர்க்கை, சண்டிகா, அபராஜிதா என்ற நிலையில் வழிபடப்படுகிறார். மகா துர்க்கையானவர் உக்ரசந்தா, பத்ரகாளி, காத்யாயனி என்ற மூன்று வடிவங்களில் உள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mridanga Saileswari Temple | Famous Temple Kerala, Kannur". பார்க்கப்பட்ட நாள் 2017-12-25.
  2. "Durga". Archived from the original on 21 August 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  3. "Blog".

வெளி இணைப்புகள்[தொகு]