பெரியநெசலூர் சஞ்சீவிராயர் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சஞ்சீவிராயர் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:பெரியநெசலூர், விருத்தாசலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விருத்தாசலம்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:சஞ்சிவிராயர்
தாயார்:தாயார்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பெரியநெசலூர் சஞ்சீவிராயர் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சஞ்சிவிராயர், தாயார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

பெரியநெசலூர் கிராமத்தின் மையப்பகுதியில் அபூர்வமாக வைனவ திருத்தலமான சஞ்சீவிராயர் பெருமாள் ஆலயத்தின் கருவறையும் , சைவ திருத்தலமான சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் கருவறையும் ஒரே நேர்கோட்டில் நேர் எதிராக அமையப்பெற்றுள்ளது. மேலும் சஞ்சீவிராயர் பெருமாள் ஆலயத்தின் கருவறை முன் நின்றபடி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் கருவறையில் ஆராதனை செய்யப்படும் தூப ஒளியினை தரிசிக்க முடியும். இந்த நிகழ்வு ஆலயத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)