பண்டரிபுரம் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தின் 11 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் பண்டரிபுரம் நகரத்தில் உள்ளது. இத்தாலுகா 100 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[2]இதன் மக்கள் தொகை 4,42,368 ஆகும். 1292.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 342 வீதம் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 88,637 வீடுகளைக் கொண்ட பண்டரிபுரம் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 4,42,368 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 2,30,359 மற்றும் பெண்கள் 2,12,009 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 920 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 56,845 - 12.85% ஆகும். சராசரி எழுத்தறிவு 67.7% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 15.41% மற்றும் 2.79% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.52%, இசுலாமியர்கள் 5.07%, பௌத்தர்கள் 0.42%, சமணர்கள் 0.74% மற்றும் பிறர் 0.25% ஆக உள்ளனர்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டரிபுரம்_தாலுகா&oldid=3340763" இலிருந்து மீள்விக்கப்பட்டது