நாம் (1953 திரைப்படம்)
நாம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | யூப்பிட்டர் மேகலா |
கதை | திரைக்கதை மு. கருணாநிதி |
இசை | சி. எஸ். ஜெயராமன் |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் எம். என். நம்பியார் பி. எஸ். வீரப்பா சக்ரபாணி வி. என். ஜானகி பி. கே. சரஸ்வதி |
வெளியீடு | மார்ச்சு 5, 1953 |
நீளம் | 16711 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படத்தை மு. கருணாநிதி எழுத, ம. கோ. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா, மு. கருணாநிதி ஆகியோர் பங்குதாரர்களாகி உருவாக்கிய மேகலா பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது.[2]
குமரன் ஒரு ஜமீன்தாரி எஸ்டேட்டின் வாரிசு, அதை தன் தாய் மரண படுக்கையில் இறக்கும் போது தெரிந்து கொள்கிறான். ஆனால், உயிலையும் அது தொடர்பான சாசனத்தையும் மலையப்பன் (பீ எஸ் வீரப்பா) மறைத்து வைத்து விடுகிறார் . மருத்துவர் சஞ்சீவியும்( எம் ஜி சக்ரபாணி )சொத்தில் கவர்வதில் ஆர்வமாக இருக்கிறார், மேலும் தனது மகளை குமரனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். அவர் விருப்பத்திற்கு மாறாக குமரன் மலையப்பனின் சகோதரி மீனாவை (வீ. என் . ஜானகி ) காதலிக்கிறான். இடையில் குமரன் சொத்து உயில் பற்றிய மீனாவின் நோக்கத்தை சந்தேகித்து, கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். நகரத்தில் வந்ததும் ஒரு குத்துச்சண்டை வீரராக களம் இறங்குகிறான் . இதற்கிடையில் மலையப்பன் குமரனின் வீட்டிற்கு தீ வைக்கிறார், தீயில் குமரன் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், மீனாவால் குமரன் காப்பாற்றப்படுகிறான் . காணாமல் போன சொத்து உயில் பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, அதே நேரத்தில், தீயில் உருகுலைந்த குத்துச்சண்டை வீரர் இரவில் சுற்றி வருவதை பேய் பற்றிய வதந்திகளுக்கு ஊரில் வழிவகுக்கிறது. இருப்பினும், இறுதியில்உண்மை வெளிப்பட்டு, காதலர்கள் மீனா - குமரன் ஒன்று சேருகின்றனர் .
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ராண்டார் கை (29 டிசம்பர் 2012). "Naam (1953)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/naam-1953/article4252688.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.