உள்ளடக்கத்துக்குச் செல்

தொப்பூர் கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொப்பூர் கணவாய்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி மாவட்டம்

தொப்பூர் கணவாய் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இது சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம் தொப்பூர் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

சேலம் மாவட்டத்தை தருமபுரி மாவட்டத்துடன் இணைக்கும் கணவாய்களுள் இதுவும் ஒன்று. மற்றொன்று மஞ்சவாடி கணவாய் ஆகும்.[1]

போக்குவரத்து

[தொகு]

தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ளது, இது இந்தியாவின் முக்கிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையாகும். [2] இது மேட்டூர் நகரத்தையும் ஈரோடு நகரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 20 இன் இணைப்புப் புள்ளியாகும். [3] மா. தெ-44, தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் தொப்பூர் இடையே உள்ள கணவாய் சாலையானது, மலைப்பாங்கான சரிவுகள் கொண்ட மோசமான சாலையாகும் இதன் வடிவமைப்பு காரணமாக அபாயகரமான விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இச்சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மஞ்சவாடி கணவாய் அருகே நெடுஞ்சாலையில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு". www.maalaimalar.com. மாலைமலர். Retrieved 6 நவம்பர் 2022.
  2. "Official apathy turns Thoppur Ghat a killer stretch". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 December 2011 இம் மூலத்தில் இருந்து 8 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111208124434/http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Official-apathy-turns-Thoppur-Ghat-a-killer-stretch/articleshow/11032110.cms. 
  3. "Tamil Nadu Road Sector Project". Highways and Minor Ports Department. Archived from the original on 14 December 2012.
  4. Plan to widen Thoppur ghat road in Dharmapuri to prevent accidents
  5. Thoppur accident highlights need for elevated corridor
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொப்பூர்_கணவாய்&oldid=4183951" இலிருந்து மீள்விக்கப்பட்டது