தொடே மோங்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடே மோங்கே என்பவர் தங்க நாடோடி கூட்டத்தின் ஒரு கான் ஆவார். இவர் 1280 முதல் 1287 வரை ஆட்சி புரிந்தார்.

சுயசரிதை[தொகு]

தொடே மோங்கே, தோகோகனின் மகன் ஆவார். படு கானின் கொள்ளுப்பேரன் மற்றும் மெங்கு-தைமூரின் தம்பி ஆவார். இவருக்கு கடவுள் பக்தி அதிகமாக இருந்தது. 1283 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.[1] மத நம்பிக்கை ஆழமாக இருந்த காரணத்தினால் தனது ஆட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்வதில் இவர் ஆக்ரோசமானவராக இருக்கவில்லை. எனினும் பொது எதிரியான ஈல்கானரசுக்கு எதிராக எகிப்தின் மம்லுக் சுல்தானகத்துடன் நல்ல தொடர்பில் இருந்தார். ரஷித் அல்-தின்னின் கூற்றுப்படி குப்லாய் கானுடன் நல்ல உறவு முறையை பின்பற்ற ஆர்வமாக இருந்தார். குப்லாயின் மகன் நோமோகனை யுவான் அரசவைக்கு விடுவித்து அனுப்பினார். இவரது ஆட்சி காலத்தில் தங்க நாடோடிக் கூட்டத்தில் நோகை கானின் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்தது. இவர் 1284/85 ஆம் ஆண்டில் ஹங்கேரிக்கு எதிராக இரண்டாவது தாக்குதலை நடத்தினார். எனினும் அத்தாக்குதல் கடும் தோல்வியை இவரது ராணுவத்திற்கு தந்தது. 1287 ஆம் ஆண்டு தனது உறவினர் தொலே புகாவிற்கு அரியணை கிடைப்பதற்காக தனது பதவியிலிருந்து இவர் விலகினார்.[2]

உசாத்துணை[தொகு]

  1. Martin, Janet, Medieval Russia, 980-1584, p. 171.
  2. வார்ப்புரு:MLCC

மேலும் படிக்க[தொகு]

  • David Morgan, The Mongols
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடே_மோங்கே&oldid=3151225" இலிருந்து மீள்விக்கப்பட்டது