தமிழமுதன்
This template is misplaced. It belongs on the talk page: பேச்சு:தமிழமுதன்.
| இது வாழ்க்கை வரலாறாக இல்லாதபோதும் வாழும் மனிதர்களைக் குறித்த குறிப்புக்கள் உள்ளதால் இக்கட்டுரை வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு கொள்கைக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். சான்றுகள் குறிப்பிடப்படாது அல்லது நம்பகமற்ற சான்றுகளிலிருந்து வாழும் நபர்கள் குறித்த சர்ச்சைக்குரிய உள்ளுரைகள், குறிப்பாக பழிப்புரையாகக் கருதப்படக்கூடியவை, இக்கட்டுரையிலிருந்தும் பேச்சுப் பக்கத்திலிருந்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இத்தகைய உரைகள் திரும்பத் திரும்ப உட்பகுத்தப்பட்டால் அல்லது வேறு சிக்கல்கள் இருந்தால் இது குறித்தப் புகார்களை இங்கு அளிக்கவும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டவருடன் உங்களுக்குத் தொடர்பு இருந்து உதவி தேவைப்பட்டால், இந்தப் பக்கத்தைக் காண்க. |
கவிஞர் தமிழமுதன் | |
|---|---|
| பிறப்பு | ஜெ.தணிகாசலம் சென்னை, தமிழ்நாடு |
| பெற்றோர் | த. ஜெயராமன் ஜெயலட்சுமி |
கவிஞர் தமிழமுதன் ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். தமிழ்நாடு திரைப்படப் பாடலசிரியர்கள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தமிழமுதன் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சாத்தனூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது பெற்றோர் த. ஜெயராமன், ஜெயலட்சுமி.இவரது இயற்பெயர் தணிகாசலம். இவர் சென்னையில் சாமராவ் துவக்கப்பள்ளி மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றவர். ஓவியர் ஆக வேண்டும் என்பதே இவரது துவக்கக் கால விருப்பமாக இருந்தது. கவிதைகள் எழுதி பள்ளியில் பரிசுகள் வாங்கியதால், அதிலேயே தொடர்ந்து இயங்க ஆரம்பித்தார். இவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் மீதுள்ள பற்றின் காரணமாக தமிழமுதன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.
கவிதைகள்
[தொகு]இவரது முதல் கவிதை பாக்யா சித்திரைச் சிறப்பிதழில் வெளியானது. கண்ணதாசன் பதிப்பகம், கவிதை உறவு, உரத்த சிந்தனை இணைந்து நடத்திய கவிதைப்போட்டியில், ‘மதக்கலவர களத்தில்/ செருப்புகள் மட்டும்/ ஒன்றாகக் கிடந்தன/ மனிதர்கள் பிரிந்து பி...ரி...ந்து’ என்ற கவிதைக்கு முதல் பரிசு மட்டுமல்லாமல், ‘வைரவரிக் கவிஞர்’ என்று காந்தி கண்ணதாசன் அளித்த விருதும் கிடைத்தது. அரைக்கம்பத்தில் என்ற முதல் புதுக்கவிதை நூலுக்கு ஸ்டேட்பேங்ஆப்இந்தியா ‘சிறந்த புதுக்கவிதை நூல்’ என்ற முதல் பரிசு பெற்றிருக்கிறார்.[2]
எழுதிய கவிதை நூல்கள்
[தொகு]- அரைக்கம்பத்தில்
- புன்னகைப்பிரதேசம்
- அறிவுச் சூர்யன் அண்ணல் அம்பேத்கர் (முதன் முதலில் புதுக்கவிதையில் எழுதப்பட்ட அம்பேத்கர் வரலாற்றுக் காவியம்)
- நீர் மத்தாப்பு (ஹைகூ கவிதைகள்)
- எந்த முகத்தோடு வருவாய்
- ஐந்துணையாவது
- மௌன அம்புகள்
- இசைக் குறிப்புகள் 50
- அழகின் புத்தகம்
- அணிகலன் 40
- நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (தொகுப்பாசிரியர்)
- இன்னும் சொல்ல வேண்டும் (மரபுக்கவிதை)
திரைப்பட பாடலாசிரியராக
[தொகு]- எழில் இயக்கிய ‘அமுதே’ படத்தில் அனைத்துப் பாடல்களும்
1.அன்பே அது ஒரு காலம்
உன்னிமேனன்
2.வளையல் காடு
கார்த்திக்,மால்குடி சுபா
3.என்ன என்ன நான்
சொர்ணலதா
4.மதுர ஜில்லா
மாணிக்கவிநாயகம்,பிரியா
5.போட்டுத்தள்ளுடா
கிருஷ்ணராஜ்
- கலக்குற சந்துரு படத்தில் அனைத்துப் பாடல்களும்
1.சொல்லவா நான் 2.ஈச்சம்பாயி
- கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தில் மூன்று
பாடல்கள் 1.முதல்முறை
கார்த்திக்
2.வளைவுகளாலே
அனிதா
3.கோகிலம்மா
சுர்முகி
- அரூபம்
- மாயாண்டி குடும்பத்தார்
களவாணியே களவாணியே மதுமிதா, ரஞ்சித்
- [[கோரிப்பாளையம்
(திரைப்படம்)| கோரிப்பாளையம்]]
- மிளகா
- நேற்று இன்று நாளை
- கரிசல்பட்டியும் காந்திநகரும்
- 50 - க்கும் மைற்பட்ட மொழி மாற்றுப் படங்கள்
- 300-க்கும் மேற்பட்ட பாடல்கள்
- 200 -க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள்
விருதுகள்
[தொகு]"ஈரோடு தமிழன்பன் 80 விருது"
கண்ணதாசன் பதிப்பகம்,கவிதை உறவு, உரத்த சிந்தனை, இணைந்து எழுத்தாளர் விக்கிரமன், கவியரசர் இளந்தேவன், காந்தி கண்ணதாசன் ஆகியோரால் வழங்கிய "வைரவரிக் கவிஞர் விருது"
பண்ணைத்தமிழ்ச் சங்கம் உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் வழங்கிய "பாவேந்தர் பட்டயம்"
அஜந்தா பைன் ஆர்ட்ஸ் வழங்கிய ஔவை நடராஜன் அவர்களால் வழங்கிய "கவியரசு கண்ணதாசன் விருது"
அஜந்தா பைன் ஆர்ட்ஸ் வழங்கிய "மக்கள் திலகம் எம்ஜிஆர் விருது"
உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய உலகத் தமிழிசை மாநாட்டில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களால் வழங்கிய "தமிழிசைத் தூதூவர் விருது"
கவிதை உறவு,வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய கலைஞர் நூற்றாண்டின் "கலைஞர் விருது"
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பாட்டுக்கு ஒரு சங்கம்!. குங்குமம். 15 சூலை 2016.
- ↑ "சங்கம் வளர்க்கும் சினிமாக் கவிஞர்!". கட்டுரை. வண்ணத்திரை. 4 மே 2015. Retrieved 5 மார்ச் 2017.