சேந்தங்குடி கைலாசநாதர் மற்றும் லெட்சுமிநாராயணபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கைலாசநாதர் மற்றும் லெட்சுமிநாராயணபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, சேந்தங்குடி, மயிலாடுதுறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதர், லெட்சுமி நாராயண பெருமாள்
தாயார்:விசாலாட்சி, ரெங்கநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சேந்தங்குடி கைலாசநாதர் மற்றும் லெட்சுமிநாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், சேந்தங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கைலாசநாதர், லெட்சுமி நாராயண பெருமாள், விசாலாட்சி, ரெங்கநாயகி சன்னதிகளும், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)