சு. ஒளிச்செங்கோ
![]() | இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
பெரியார் பெருந்தொண்டர் புலவர் சு. ஒளிச்செங்கோ | |
---|---|
![]() | |
பிறப்பு | நடராசன் அண். 1934 கண்கொடுத்தவனிதம், பழைய தஞ்சாவூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | (அகவை 90) கண்கொடுத்தவனிதம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
அடக்கத்தலம் | கண்கொடுத்தவனிதம் |
தொழில் | செய்தியாளர், எழுத்தாளர், தொகுப்பாசிரியர் |
மொழி | தமிழ் |
வகை | அரசியல், சமூகம் |
இலக்கிய இயக்கம் | திராவிட இயக்கம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1960-2025 |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பெரியார் விருது (2019) |
துணைவர் | தமிழரசி |
பிள்ளைகள் | சுந்தரபுத்தன் பெரியாரினியன் வெண்ணிலா |
துரைசாமி சுந்தரம் நடராசன் என்ற இயற்பெயர் கொண்ட புலவர் சு. ஒளிச்செங்கோ, தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்க எழுத்தாளர் ஆவார்.
தொடக்க வாழ்க்கை
[தொகு]இவர் முன்னோர்கள், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த புத்தூரிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். இவர் தந்தைவழித் தாத்தா துரைசாமி, இன்றைய திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்கொடுத்தவனிதம் என்னும் ஊரில் மளிகைக்கடை வேலை செய்தவர். தந்தை சுந்தரம், விடயபுரம் வி.அப்புசாமி நாயுடுவின் பண்ணையில் கூலி வேலையும் பின்னர் சமையல் வேலையும் செய்தவர்.[1]
1934- வாக்கில் கண்கொடுத்தவனிதம் ஊரில் சுந்தரத்துக்கும் அவர் இணையர் தனபாக்கியத்துக்கும் பிறந்த நடராசன், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இளம் அகவையிலேயே இலக்கிய வாசிப்பில் ஆழ்ந்தார். எட்டாம் வகுப்பில் இவரின் விருப்பத்துக்குரிய ஆசிரியராக இருந்தவர் சிங்காரவேலு சேதுராயர் ("நாவலர்" ந. மு. வேங்கடசாமி நாட்டாரின் முன்னாள் மாணவர்). 1958-இல் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்ட நடராசன், ஒஇறகு புலவர் படிப்புக்கான புகுமுக வகுப்பில் பயில அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை நடத்திய நுழைவுத் தேர்வுகளை எழுதினார். எனினும் தேர்வுபெறவில்லை.[1]
இதன்பின் திராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகள், "பெரியார்" ஈ. வெ. இராமசாமி, வே. ஆனைமுத்து, திருவாரூர் கே. தங்கராசு போன்றோரின் உரைகள் ஆகியவற்றின்பால் நாட்டம் கொண்டார்.[1]
1958-இல் சி. பா. ஆதித்தனின் நாம் தமிழர் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதே சூன் திங்களில் மன்னார்குடி நகரில் நடைபெற்ற சாதி ஒழிப்பு, சுதந்திரத் தமிழ்நாடு மாநாட்டில் கலந்துகொண்டபோது பெரியாரை முதல்முறையாக நேரில் சந்தித்தார். 1960-இல் பெரியார் அறிவித்த தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைப்பட்டார்.[1] தொடர்பான சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று நான்கு மாதம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி சிறைகளில் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
செய்தியாளர் பணி
[தொகு]1960-இல் சி. பா. ஆதித்தன் மற்றும் அவர் மகன் பா. இராமச்சந்திர ஆதித்தன் ஆகியோருக்கு அறிமுகமான நடராசன், கொரடாச்சேரி நகரத்திற்கான பகுதிநேர செய்தியாளராக மாலை முரசு நாளிதழில் பணிவாழ்க்கையைத் தொடங்கினார்.[1] அதுமுதல் ஒளிச்செங்கோ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார் (இது கலிங்கத்துப்பரணி-யில் வரும் ஒரு குறுநில மன்னனின் பெயர்)[2]. மாலை முரசில் முப்பதுக்கும் மேலான ஆண்டுகள் பணியாற்றினார்.
1960-61 தொடங்கி விடுதலை, முரசொலி இதழ்களிலும் பெரியார், அண்ணா, ஆதித்தனார் குறித்துப் பல கட்டுரைகள் எழுதினார். இக் காலகட்டத்தில் பெரியார் வழிநடத்திய திராவிடர் கழகத்தின் (திக) பின்னாளைய தலைவர் கி. வீரமணியுடனும் நட்புகொண்டார்.[1] காமராசர், ஜெயகாந்தன் ஆகியோருடனும் அறிமுகமானார். பெரியார் இவரை ஒளியா! என்று விளித்தார்.[2]
இயக்க அரசியல்
[தொகு]1967 மே மாதத்தின் இறுதி வாரத்தில் விடயபுரம் பண்ணையில் பெரியார் நடத்திய பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில் மாணவராக, அணுக்கத் தொண்டராக பங்கேற்றவர். அங்கு பெரியார் தங்கியிருந்த பத்து நாட்களும் அவருக்கு உதவியாக பண்ணையிலேயே அருகில் இருந்தவர். அந்தப் பயிற்சிப் பள்ளியில்தான் மே 24 அன்று "கடவுள் இல்லை...கடவுள் இல்லவே இல்லை…" எனத் தொடங்கும் கடவுள் மறுப்பு வாசகம், முறையாக அறிவிக்கப்பட்டது.
எழுதிய, தொகுத்த நூல்கள்
[தொகு]- பெரியார் – ஒரு வாழ்க்கைப் பாடம்
- விடையபுரம் – கடவுள் மறுப்பின் தொடக்கப்புள்ளி
- பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்[3][4] - சங்கமி வெளியீடு
- வகுப்புவாரி பிரதிநிதித்துவம்: திருவிக – பெரியார் அறிக்கைப் போர் - 2019
- கர்மவீரர் காமராசர்
- பெரியார் பொன்மொழிகள்
- பெரியார் பழமொழிகளும் பயன்மொழிகளும்
- எல்லாம் நன்மைக்கே, தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரைகள்[5] - தமிழ்வெளி வெளியீடு
- ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள் - தமிழ்வெளி வெளியீடு - 2021
விருதுகள்
[தொகு]29 ஏப்ரல் 2019 அன்று திராவிடர் கழகம், பெரியார் திடலில் நடத்திய தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் ஒளிச்செங்கோவுக்குப் பெரியார் விருது வழங்கப்பட்டது.[6][7]
மறைவு
[தொகு]தன் இறுதி நாட்களில் கண்கொடுத்தவனிதம் ஊரில் வேளாண் பணிகளை கவனித்துக்கொண்டு ஓய்வைக் கழித்துவந்தார் ஒளிச்செங்கோ.
ஒளிச்செங்கோ வாழ்க்கையை மையமாக வைத்து, பெரியவன் எனும் புதினத்தை 48-ஆவது சென்னை புத்தகக் காட்சியின் ஒரு பகுதியாக 8 சனவரி 2025 மாலையில் அவரின் மூத்த மகன் சுந்தரபுத்தன் பல நண்பர்களின் பங்களிப்புடன் வெளியிட்டார்.[8] மறுநாள் இ.சீ.நே. 4:00 மணியளவில் உடல்நலக் குறைவால் ஒளிச்செங்கோ தன் 90-ஆம் அகவையில் கண்கொடுத்தவனிதம் ஊரிலேயே காலமானார்.[9] அவர் மறைவுக்கு கி. வீரமணி இரங்கல் தெரிவித்தார்.[10] அன்றே ஒளிச்செங்கோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அதன்பின் சனவரி 24 அன்று ஒளிச்செங்கோ உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நிகழ்வில் தமிழ்நாட்டு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைவர் ச. மருதுதுரை, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.[11] இறையன்பு பேசுகையில் ""இந்த எளிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதன் மூலம் எனக்கு ஒரு நிறைவு ஏற்படுகிறது. வாழ்நாள் முழுவதும் தகவல்களைச் சேகரிப்பதும், அதை பாதுகாப்பதுமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் பெரியவர் ஒளிச்செங்கோ. எளிய வாழ்க்கையிலும் கடைசிவரை மாறாமல் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர். அவரது வாழ்க்கையில் இருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்..." என்றார்.[12]
குடும்பம்
[தொகு]இவரது மனைவியின் பெயர் தமிழரசி. இரு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் சுந்தரபுத்தன், சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனிலின் நண்பரும் ஆவார். இளைய மகன் பெரியாரினியன், சொந்த ஊரில் துணித்தொழில் செய்துவருகிறார். மகள் வெண்ணிலா, திருமணமாகி வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள காமேஸ்வரம் எனும் ஊரில் வசிக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Swarnavel Eswaran (2016-03-29), Periyon, retrieved 2025-02-07
- ↑ 2.0 2.1 Tamizh Kalkandu - தமிழ் கல்கண்டு (2024-05-30), எங்க அப்பா: தன் தந்தையார் சு. ஒளிச்செங்கோ பற்றி பத்திரிகையாளர் சுந்தரபுத்தன், retrieved 2025-02-08
- ↑ "நூல்நோக்கு : திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி…". Hindu Tamil Thisai. 2018-04-07. Retrieved 2025-01-30.
- ↑ திருவள்ளுவன், இலக்குவனார் (2019-04-23). "பெரியார் படி - சு.ஒளிச்செங்கோ". அகர முதல (in ஆங்கிலம்). Retrieved 2025-01-30.
- ↑ மதிமலர் (2022-05-01). "பதினைந்து சிறுகதைகள்". Andhimazhai. Retrieved 2025-01-30.
- ↑ "பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது… – nadappu.com" (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-25. Retrieved 2025-01-30.
- ↑ KULUKKAI (2019-04-29), புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் | கி. வீரமணி | K. Veeramani, retrieved 2025-02-09
- ↑ admin (2025-01-09). "தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!". Thaaii Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-08.
- ↑ ""அப்பாவை இழந்துவிட்டேன்..." - சுந்தரபுத்தன் பதிவு". முகநூல். 9 சனவரி 2025.
- ↑ "மூத்த பெரியார் பெருந்தொண்டர் தோழர் ஒளிச்செங்கோவுக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!! - Viduthalai Daily Newspaper" (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-01-09. Retrieved 2025-01-30.
- ↑ OH Literature (2025-01-29), S Olichengo | திராவிட சிந்தனையின் வெற்றி! | ஒளிச்செங்கோ நினைவேந்தல் | OH Literature, retrieved 2025-02-08
- ↑ https://www.facebook.com/share/p/1YFu9cY5uX/.
{{cite web}}
: Missing or empty|title=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- https://www.youtube.com/watch?v=c432UD4amyU
- பெரியாரின் பெருந்தொண்டர் சு.ஒளிசெங்கோ: திருவாரூரில் ஆவணப்படம் வெளியீட்டு விழா
- https://www.murasoli.in/epaper/file_view.php?paper=VFZSVmVVMUJQVDA9
- மாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்
- PERUNTHONDAR short film பெருந்தொண்டர் ஆவணப்படம்
- Irai Anbu IAS Latest Speech | இளைஞர்கள் கற்கவேண்டிய பாடம்! | ஒளிச்செங்கோ நினைவேந்தல் | OH Literature
- S Olichengo | திராவிட சிந்தனையின் வெற்றி! | ஒளிச்செங்கோ நினைவேந்தல் | OH Literature
- பெரியவன் | சுந்தரபுத்தன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம் #நாவல்