இரண்டாம் மெகமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி →‎ஐ.நா.சிறப்பு: படவுரைத் தெளிவு
சி முகம்மது II, இரண்டாம் முகமது என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:39, 4 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் மெகமுது
அவரது ஒப்பம்

முகம்மதுII (ஆங்கிலம்:Mohammed II, துருக்கியம்:Fatih Sultan Mehmet - மார்ச்சு 30, 1432மே 3, 1481) துருக்கி சுல்தான் ஏட்ரியநோப்பிள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர்.1451-இல் பட்டத்துக்கு வந்தார்.1453-இல் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். பின்னர்,கிரிசையும், பால்க்கனின் பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய கடற்படை வல்லமையைக் கண்டு தென் ஐரோப்பா கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.

கான்சுடான்டினோப்பிள் போர்

1453 முகம்மது தனது படையுடன் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். அவரது படையில் 80,000 முதல் 200,000 படைவீரர்களும், 320 போர்க்கலன்கள் உடைய வலுவான கடற்படை வீரர்களையும் கொண்டதாக இருந்தது. இத்தகைய வலுவான படையை 1451 ஆண்டிலிருந்தே வலுப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

துருக்கிய பீரங்கி போன்றவைகளை உடைய பீரங்கிப்படையானது, துருக்கியின் சுவரைத் திறம்பட தகர்த்தது.தங்கக் கொம்பு துறைமுகத்தை, வலுவான 28இராணுவப் போர் கப்பல்கள் பாதுகாப்பைத் தகர்ப்பதும் சவாலாக முகம்மது II-க்கு இருந்தது.

ஐ.நா.சிறப்பு

மதச்சுதந்திர ஆவணம்(ferman)

முகம்மது II -வின் மதச் சுதந்திரம் குறித்த உறுதிமொழியை உதுமானியப் பேரரசு முழுவதும், 28 மே, 1463 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது.மதச்சுதந்திரம் குறித்த வரலாற்று ஆவணங்களுள் இதுவும் ஒன்று. அதனை, ஐக்கிய நாட்டு சபை, 1971 ஆம் ஆண்டு தனது அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுச் சிறப்பு செய்தது குறிப்பிட தகுந்ததாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மெகமுது&oldid=835730" இலிருந்து மீள்விக்கப்பட்டது