வண்ணநிலவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48: வரிசை 48:


== விருதுகள் ==
== விருதுகள் ==
# இலக்கியச் சிந்தனை<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=663603 |title="மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது |date=2013-03-10 |website=Dinamalar |access-date=2021-06-15}}</ref> {{சான்று தேவை}}
# இலக்கியச் சிந்தனை<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=663603 |title="மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது |date=2013-03-10 |website=Dinamalar |access-date=2021-06-15}}</ref>
# தமிழ் வளர்ச்சி கழக பரிசு {{சான்று தேவை}}
# தமிழ் வளர்ச்சி கழக பரிசு {{சான்று தேவை}}
# ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது {{சான்று தேவை}}
# ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது {{சான்று தேவை}}

15:14, 15 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

வண்ணநிலவன்
பிறப்புஉ. ராமச்சந்திரன்
(1949-12-15)15 திசம்பர் 1949
தாதன்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு இந்தியா
இருப்பிடம்கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு
பணிஎழுத்தாளர்
பெற்றோர்உலகநாதபிள்ளை
இராமலட்சுமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
சுப்புலட்சுமி (1977 - தற்போது வரை)
பிள்ளைகள்ஆனந்த் சங்கர்
சசி
உமா
விருதுகள்இலக்கியச் சிந்தனை
தமிழ் வளர்ச்சி கழக பரிசு
ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது

வண்ணநிலவன் (Vanna Nilavan, பிறப்பு: திசம்பர் 15, 1949) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் என்னும் கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன் ஆகும். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார். ‘துக்ளக்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

குடும்பம்

இவரின் தந்தை உலகநாதபிள்ளை மற்றும் தாய் இராமலட்சுமி அம்மாள். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் ராமச்சந்திரன் ஆகும். இவர்களது சொந்த ஊர் திருநெல்வேலி. இவரின் பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாக தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். இவர் ஏப்ரல் 07, 1977 அன்று சுப்புலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

படைப்புகள்

இவர் நாவல், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்றவற்றை எழுதி அவை நூல்களாக வெளி வந்திருக்கின்றன.

நாவல்கள்

  1. நேசம் மறப்பதில்லை நெஞ்சம், 1975, கவிதா பதிப்பகம், சென்னை. [1]
  2. நெஞ்சம்
  3. கடல்புரத்தில்[2]
  4. கம்பா நதி ,
  5. ரெயினீஸ் ஐயர் தெரு

சிறுகதைத் தொகுதிகள்

  1. எஸ்தர்[3]
  2. பாம்பும் பிடாரனும்[4]
  3. தர்மம்
  4. உள்ளும் புறமும்
  5. தாமிரவருணிக் கதைகள்
  6. வண்ணநிலவன் கதைகள்
  7. கரையும் உருவங்கள்

கவிதைத் தொகுதிகள்

  1. மெய்ப்பொருள்
  2. காலம்

பிற படைப்புகள்

விருதுகள்

  1. இலக்கியச் சிந்தனை[5]
  2. தமிழ் வளர்ச்சி கழக பரிசு [சான்று தேவை]
  3. ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது [சான்று தேவை]

மேற்கோள்கள்

  1. தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 36
  2. ப்ளாக், கிராபியென். "`` `கடல்புரத்தில்' பிலோமி பெரும் துயரத்தில் ஆழ்த்தினாள்..! - வண்ணநிலவன் #LetsRelieveStress". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15. {{cite web}}: External link in |website= (help)
  3. "வண்ண நிலவன் சிறுகதைகள்". தினமணி. https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&action=edit&section=4. பார்த்த நாள்: 15 June 2021. 
  4. "வண்ணநிலவன் சிறுகதைகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.
  5. ""மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது". Dinamalar. 2013-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணநிலவன்&oldid=3171005" இலிருந்து மீள்விக்கப்பட்டது