அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

12:44, 26 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

புனிதர்
அப்துல் காதிர் அல்-ஜிலானி
Abdul Qadir al-jilani

ஷேக்,
படிமம்:Shrine of Abdul Qadir Jilani..jpg
ஈராக், பக்தாது நகரில் உள்ள அப்துல் காதிர் ஜிலானியின் நினைவகம்
பிறப்புஅப்துல் காதிர்
அண். (1077-03-18)18 மார்ச்சு 1077
அமோல், ஈரான்
இறப்பு15 சனவரி 1166(1166-01-15) (அகவை 88)
பக்தாத், ஈராக்
கல்லறைபக்தாத், ஈராக்.
தேசியம்ஈராக்கியர்
சமயம்சுன்னி இஸ்லாம்
பெற்றோர்அபு சாலி, உம்மு காயிர் பாத்திமா

அப்துல் காதிர் அல்-ஜிலானி (Abd al-Qadir al-Jilani, அரபு மொழி: عبد القادر الجيلاني‎, குர்தியம்: Evdilqadirê Geylanî, 1077 - 1165) என்பவர், இசுலாம் மறை வளர்ச்சிக்காக உண்டான நான்கு பிரிவுகளில் ஒன்றான காதிரியா என்ற பிரிவை தோற்றுவித்தவர் ஆவார். இவர் ஈராக்கில் உள்ள சிலான் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் அசரத் அபுசாலே ஆகும். தாயார் பெயர் உம்மத்துல் கயா பாத்திமா ஆகும். இவர் தமது பதினெட்டாம் வயதில் பாக்தாது வந்தார். அப்போது அங்கு, அரசனாக இருந்து, சிறப்பாக ஆட்சி நடத்தியவர் அல் முசு தந்சித் பில்லா அபுல் முசபர் யூசுப்-பின் அல் முக்தசி அல் அப்பாசி ஆகும்.

இவர் பாக்தாதின் பெயர்பெற்ற அறிஞர்களிடம் கல்வி பயின்றார். இவர் அபுல் கயாஅம்மாத் பின் முசுலிம் பின், துர்த்துல் அப்பாசு அவர்களின் சீடர் ஆனார். அன்று தலைசிறந்து விளங்கிய சா அபு யாக்கூப் யூசுப் பின் அயூப் அல் அமதானி அல் சாகித் என்ற ஆசானைச் சார்ந்து இறையின் உட்பொருளை உணர்ந்தார்.

இந்த இறையியல் அறிஞர் பாக்தாது நகரிலேயே காலமானார். இந்த அறிஞரின் கல்லறையை இன்றும் ஈராக்கிய மக்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

காதிரியா

இசுலாத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றாக, காதிரியா(Qadiriyya) கருதப்படுகிறது.

புற இணைப்புகள்

இயற்றியவை

  • [1][2][3] அவரின் ஏடுகளும், நூல்களும் (ஆங்கில மொழியில்)
  • English translations of some of his works Al-Baz (ஆங்கில மொழியில்)
  • A Diwan அரபியில் எழுதப்பட்டுள்ள இணைய நூல்