சாப்டூர் பாளையக்காரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரையில் நாயக்கர்கள் ஆட்சிக் காலம் ஏற்படும் முன்பே இராசகம்பளம் மக்களின் பாளையங்கள் குறிப்பாக எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி , போடிநாயக்கனூர், சேந்தமங்கலம் , சாப்டூர் போன்ற பாளையங்களில் சாப்டூர் என்னும் பகுதியில் வேகிளியார் சில்லவார் வம்சத்தைச் சேர்ந்தோர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இயற்கை வளம் நிறைந்த பகுதியாக இருக்கும் இப்பகுதியில் இராசகம்பளம் மற்றும் பளியர் மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.[1]

பூர்விகம்[தொகு]

ஆந்திரம் மாநிலம் சந்திரகிரி என்னும் பகுதியில் இருந்து இங்கு வந்த இவர்கள் கொட்டியம் நாகம்ம நாயக்கர் என்பவரால் தனி இடத்தில இப்பகுதியில் குடிபெயர்ந்தனர் . இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து இனத்தின் பெண்ணை கேட்டதாகவும் அதனால் தங்கள் இன பெண்களை காப்பாற்ற தெற்கு நோக்கி வந்ததாகவும் கூறப்படும் தொட்டிய நாயக்கர்களின் கதையினை போலவே இவர்களும் தெரிவிக்கின்றனர்.

தமிழ்ப்பற்று[தொகு]

சாப்டூர் சமின் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டு வந்துள்ளனர் , அதிலும் நாகைய சாமி காமைய நாயக்கர் என்பவர் தமிழ் புலவர்களை ஆதரித்தும் , தானே தமிழ் மற்றும் இசை ஆகியவற்றில் புலமைக் கொண்டும் வாழ்ந்து வந்துள்ளார் . [2][3]

பெயர்க்காரணம்[தொகு]

சாப்டூர் என்பது சாப டூர் என்னும் தெலுங்கு சொல்லில் இருந்து வந்துள்ளது . சாப என்றால் கம்பிளி என்று தெலுங்கில் பொருள் . ராஜகம்பளம் மக்கள் அக்காலகட்டத்தில் கம்பிளி என்னும் போர்வையினை தங்களின் மீது அணிந்து இருப்பர் . எனவே இவ்வூருக்கு சாப்டூர் என்று பெயர் வந்தது . [4]

ஜமின் எல்லைகள்[தொகு]

சுமார் 7500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவர்களின் சொத்து மதிப்புகள் தற்போது ஜமின் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு 200 ஏக்கர் மட்டும் கொண்டு உள்ளது , தற்போது ஜமின் வாரிசுதாரராக இருப்பவர் ராம் குமார் நாயக்கர் . இவர் இன்று வாழ்ந்து வந்த அரண்மனை சுமார் 500 வருடம் பழமையானது .[5]

காடுகளைப் பாதுகாத்தல்[தொகு]

இப்பாளையகாரர்கள் காடுகளை கருத்தாக பாதுகாத்துள்ளனர் . அரசரின் ஆணை இல்லாமல் சிறு விரகினை கூட யாரும் எடுக்க முடியாதாம் . இன்றும் இங்குள்ள மக்கள் காமைய நாயக்கர் பாறை என்றே இங்குள்ள சிறு சிறு பாறைகளை அழைத்து வருகின்றனர் . [6]

மேற்கோள்கள்[தொகு]

<references>

  1. https://docs.google.com/viewer?a=v&q=cache:S7Lk2Ub-TNIJ:www.sasnet.lu.se/tribalevolution.pdf+saptur+zamin+paliyan&hl=ta&gl=in&pid=bl&srcid=ADGEESjdAXq69F15yU9vKls1Is94ZMGCnw3LgK1rcwaWbMH_E1WXBnHxdjd6C_wwQRWTisujRnSpd-NXizkSgqK6yCDHHPyz93gp5Mlo73zhNT8N2zGzEypHviLarh1wj36YCmLElOmg&sig=AHIEtbSwr_G5xdUFHR-kVMnfe9XSebVPiQ
  2. http://indiankanoon.org/doc/555804/
  3. http://www.archive.org/stream/madurafrancis01madr/madurafrancis01madr_djvu.txt
  4. http://princelystatesofindia.com/Polegars/saptur.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-25. பார்க்கப்பட்ட நாள் 2011-11-16.
  6. http://books.google.co.in/books?id=cqAlHNTOWJgC&pg=PA136&lpg=PA136&dq=saptur+zamin&source=bl&ots=OVzVmHBM-I&sig=mDpMBR1Dm3gYoHkCLy8gY1O86_4&hl=ta&ei=9p7DTtKqL8azrAf53Kz3Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCIQ6AEwADgK#v=onepage&q=saptur%20zamin&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்டூர்_பாளையக்காரர்&oldid=3602764" இலிருந்து மீள்விக்கப்பட்டது