உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புசாமி
கருப்பண்ணசாமியின் சிலை
வேறு பெயர்கள்
  • ஆண்டவர்
  • கருப்பு
  • கருப்பன்
  • கருப்பசாமி
  • கருப்பண்ணசாமி
  • மாயாண்டி கருப்பன்
  • அய்யா
எழுத்து முறைகருப்பசாமி
வகைதிராவிட நாட்டுப்புற சமயம்
இடம்துல்லியமாக இல்லை
ஆயுதம்அருவாள், ஈட்டி, கதை, வாள், வெள்ளித் தடி
Vathiyar Thottathu Karuppu Svami
வத்தியார் தோட்டத்து கருப்புசாமி

கருப்பசாமி (Karuppuswamy) முதன்மையாக தமிழ்நாட்டில் வழிபடும் 21 காவல் தெய்வங்களில் முதன்மை காவல்_தெய்வம் ஆவார். இவரை கருப்பன் என்றும் , கருப்பண்ணசுவாமி எனவும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாக பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். தமிழ்நாடு, கேரளம் மற்றும் இலங்கைச் சமூகக் குழுக்களிடையே பிரபலமானவர். அவர் ஐயனாரின் 21 காவல் தெய்வங்களில் ஒருவர், மேலும் தமிழக நாட்டுப்புற மதத்தில் உள்ள 21 காவல் தெய்வங்களில் ஒருவர்.[1]

கருப்பசாமி வழிபாடு பாண்டிய நாடு கிராமங்களில் பரவலாக காணப்படுகின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு.

கருப்புசுவாமி, டிரினிடாட் மற்றும் டொபாகோ, கயானா, பிஜி, மொரிசியசு, ரீயூனியன், சீசெல்சு, குவாதலூப்பு, சிங்கப்பூர், மலேசியா, மர்தினிக்கு ஆகிய நாடுகளில் சங்கிலி கருப்பன், சங்கனி பாபா என வழிபடப்படுகிறார்.

உருவம்

[தொகு]
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் சிற்பப் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருப்பண்ண சாமி சிலை. கிபி 1900 காலத்திய இச்சிலை, விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக சிலையின் அருங்காட்சியக்குறிப்பில் காணப்படுகிறது.

நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.[2]

மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் திருமாலாகச் சிறு தெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் காேவிலில் முத்துக் கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.

சங்கிலிக் கருப்புசாமி மிகவும் உக்கிரம் கொண்டவராகவும், அவரை அடக்கப் பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டுச் சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கருப்புசாமி உள்ளார்.

நம்பிக்கை

[தொகு]

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கருப்புசாமி என்னும் பெயர் கருப்பசாமி எனவும் வழங்கபடுகின்றது.[3]

உச்சிபொத்தை அக்னி கருப்பசாமி கோயில்

[தொகு]

அக்னி கருப்பசாமியை தென்காசி மாவட்டம் உச்சிபொத்தை என்ற ஊரில் அமைந்துள்ள ஆலத்திபோத்தி அய்யனார் அக்னி கருப்பசாமி கோயிலில் காணலாம். இது தான் தமிழ்நாட்டின் பல பிரசித்தி பெற்ற கருப்புசாமி கோயில்களில் ஒன்றாகும். அக்னி கருப்பசாமி மந்திரம் இங்கு அனைவராலும் சொல்லப்படும் அக்னி கருப்பா அருளை கொடுப்பா என்று ஒரு தரம் சொன்னவுடன் அவனுடைய அருள் நம்மை வந்து முழுமையாக சேரும். பூஜை செய்ய தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9962984804. முருகையா கணபதி. உச்சிபொத்தை.

விளைநிலங்களில் கருப்புசாமி கோயில்கள்

[தொகு]

விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி அவருக்கு ஆண்டுக்கொருமுறை ஒரு சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம் ஆகும்.

கருப்புசாமிக்கு பிற பெயர்கள்

[தொகு]

108 கருப்புசாமிகள் உள்ளதாகவும், 1008 கருப்புசாமிகள் உள்ளதாகவும் நாட்டார் தெய்வங்களை வழிபடும் மக்கள் நம்புகின்றனர். பெரும்பாலான இடங்களில் கருப்புசாமிக்கு உருவம் இல்லாமல் பதிவு வைத்து வழிபடுகின்றனர். அத்தகைய இடங்களில் பெயரே முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. இத்தனை வகையான கருப்பு சாமிகளுள் சிலவற்றுக்கு மட்டுமே உருவங்கள் கொடுக்கப்பட்டு வரையரை செய்யப்பட்டுள்ளன. 108 கருப்புசாமிக்கும் மூத்தவர் கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் பெரியசாமி என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

  • அக்னி கருப்பசாமி, உச்சிபொத்தை
  • அல்லிநகரம் முக்கூட்டு கருப்பசாமி
  • வாத்தியார் தோட்டத்து கருப்பசாமி[4]
  • குள்ள கருப்புசாமி, கள்ளக்குறிச்சி
  • சங்கிலி கருப்புசாமி
  • காங்கேயம் சுண்டுவிரல் கருப்பசாமி
  • ஆலடி கருப்பசாமி
  • சிறுவனூர் பெரியகருப்புசாமி மற்றும் சின்னக்கருப்புசாமி
  • மார்நாடு கருப்பசாமி, சின்னப்பேராலி, விருதுநகர்
  • முப்புலி கருப்பர்
  • கருப்பனார் சாமி
  • குல கருப்பனார்
  • கருப்பனார்
  • பதினெட்டாம்படியன் (மதுரை அழகர் கோயிலில் உள்ள கருப்பசாமி சன்னதிக்கு பதினெட்டு படிகள் இருப்பதால் இந்த பெயர் உண்டு ஆகும்)[5]
  • சின்ன கருப்பசாமி
  • மலையாளம் சுவாமி
  • பெரிய கருப்பசாமி
  • மளுவேந்தி கருப்பணசாமி
  • மீனமலை கருப்பசாமி
  • முன்னோடை கருப்பசாமி
  • நொண்டி கருப்பசாமி
  • ஒண்டி கருப்பசாமி
  • கொம்படி கருப்பண்ணசாமி, வாடிப்பட்டி ஸ்ரீ கருப்பசாமி கோயில்
  • கோட்டை வாசல் கருப்பசாமி
  • அச்சன்கோவில் கருப்பசாமி
  • மடை கருப்பசாமிமாவட்டம்ளம்
  • ஆகாச கருப்புசாமி
  • தலத்துக்கருப்பசாமி, மேலநம்பிபுரம், விளாத்திகுளம்
  • பெரிய ஆலங்குளம் சந்தனக்கருப்பசாமி
  • வில்வமரத்து கருப்பராயம் சுவாமி, நம்பியூர், ஈரோடு மாவட்டம்
  • பொந்துபுளி கருப்பசாமி, மதுரை மாவட்டம்
  • வண்ண கருப்பசாமி, விருப்பாச்சி
  • சோனைகருப்பசாமி மதுரை மாவட்டம்
  • கோட்டைமலை கருப்பசாமி புளியங்குடி தென்காசி மாவட்டம்
  • கிளிக்கூண்டு கருப்பசாமி வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்
  • ஆவியூர் மார்நாட்டு கருப்பசாமி
  • ஆவியூர் நொன்டிகருப்பசாமி முத்துகருப்பசாமி
  • ஆவியூர் ரெட்டகருப்பசாமி
  • மாங்குளம் மார்நாடு கருப்பசாமி
  • மதலைக்கருப்புசாமி, கங்கைகொண்டான், பரமக்குடி
  • கொல்லிமலை மாசி பெரியகருப்பசாமி, நாமக்கல்
  • கொக்கு வெட்டி கருப்பசாமி மற்றும் சேந்தரப்பன் கோவில், அம்மாபட்டி, துறையூர்
  • கீரனூர் மலையாளக் கருப்பசாமி
  • கீரனூர் சந்தனக் கருப்பசாமி
  • கீரனூர் சங்கிலிக் கருப்பசாமி

இலங்கையில் கருப்பணசாமி வழிபாடு மற்றும் தகவல்கள்

[தொகு]

இலங்கையில் உள்ள பலர் பார்வதி, காளி, முருகன், பிள்ளையார், சிவன், விஷ்ணு என்ற பல கடவுள்களை பக்தியோடு நம்புகிறார்கள். தமிழ் மக்கள் மாரியம்மன், காளியம்மன், முனியாண்டி சுவாமி, கருப்பண்ண சுவாமி, சுடலை மாடசுவாமி, மதுரை வீரன், வீரபத்திரன் போன்ற சக்தி வாய்ந்த கிராம தெய்வங்களை நீண்ட காலமாக வழிபட்டு வருகின்றனர். அவர்கள் குல தெய்வங்கள் அல்லது கிராம காவல் தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஐயப்பனின் காவல் தெய்வமாக கருப்பு சுவாமி இருப்பதால் பத்தினெட்டாம்பாடி கருப்பு சுவாமியை அய்யப்ப பக்தர்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். அய்யப்பன் பக்தர்கள் கருப்பு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். கருப்பு சுவாமி பூஜை (மண்டல பூஜை) என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு சுவாமியின் கல் பிரதி

மேலே உள்ள படத்தில் சின்னமான கல் பிரதி காணப்படும். இந்த வழிபாடு முறை மிகவும் பாரம்பரியமானது மற்றும் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்றும் கூட, மக்கள் இத்தகைய பாரம்பரிய முறைகள் மூலம் தெய்வவழிபாட்டில் ஈடுபடுகின்றன.[6]

உச்சிபொத்தை அக்னி கருப்பசாமி மந்திரம்

[தொகு]

“அக்னி கருப்பா அருளை கொடுப்பா!”

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bloomer, Kristin C. (2018). Possessed by the Virgin: Hinduism, Roman Catholicism, and Marian Possession in South India (in ஆங்கிலம்). Oxford University Press. p. 291. ISBN 978-0-19-061509-3.
  2. ":: TVU ::".
  3. கறுப்பு = சினம் - 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' - தொல்காப்பியம் உரியியல். கருப்பு = கருமைநிறம்
  4. https://vathiyarthottathukarupparayarr.business.site/?m=true
  5. https://www.vikatan.com/spiritual/temples/madurai-the-history-and-the-glorious-significance-of-pathinettampadi-karuppu-temple
  6. "Proceedings of First International Conference & Gathering of Elders". iccsus.org. hon. V. Radhakrishnan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பசாமி&oldid=4308816" இலிருந்து மீள்விக்கப்பட்டது