ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ) என்பது காங்கிரஸ் கட்சி தலைமையில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தொடங்கப்பட்ட ஒரு கூட்டணி அமைப்பாகும்.

கூட்டணி வரலாறு[தொகு]

குறைந்தபட்ச செயல் திட்டம்[தொகு]

  • இக்கூட்டணி அரசின் செயல் வடிவமாக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன்படி ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.

ஆரம்பகால ஆதரவுகள்[தொகு]

ஆரம்பத்தில் 59 எம்பிக்களை கொண்டிருந்த இடது சாரிகள் ஐமுகூ க்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கினர். அதேபோன்று கூட்டணியில் இல்லாவிட்டாலும் சிறு கட்சிகளும் வெளியிலிருந்து வழங்கினர். அதில் 39 எம்பிக்களைக் கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சி, 4 எம்பிக்களைக் கொண்டிருந்த அஇஅதிமுக, 3 எம்பிக்களை கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 19 எம்பிக்களை கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நம்பிக்கை வாக்கெடுப்புகள் வந்தால் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தன. எனினும் இக்கட்சிகள் அரசின் அங்கமாக இருக்கவில்லை. எனவே குறைந்தபட்சம் 543 மொத்த எம்பிக்களில் 335 எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தது.

காங்கிரசுடன் கொள்கை முரண்பாடு இருந்த போதிலும், இடது சாரிகள் மதச்சார்பற்ற அரசு தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.[1]

ஆதரவை திரும்பப் பெறுதல்[தொகு]

தெலுங்கானா இராஷ்டிரிய சமிதி[தொகு]

கூட்டணியிலிருந்து வெளியேறிய முதல் கட்சி. ஆந்திரப்பிரதேச அரசிலிருந்து முதலில் வெளியேறி அக்கட்சி பின்னர் மத்திய அரசிலிருந்து வெளியேறினார் அதன் தலைவர் சந்திரசேகர ராவ். பின்னர் அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.[2]

மதிமுக[தொகு]

16 மார்ச்சு 2007ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.

பகுஜன் சமாஜ் கட்சி[தொகு]

உபியில் தமது கட்சிக்கு எதிர்த்து வந்த்தைத் தொடர்ந்து 21 சூன் 2008ல் விலகிக் கொண்டது.

இடது சாரிகள்[தொகு]

இந்திய-அமெரிக்க நியூக்லியர் ஒப்பந்ததில் இந்தியா கைசாத்தியதைத் தொடர்ந்தது இதை எதிர்த்து பிரகாஸ் காரத் தலைமையிலான மார்க்சிஸ் கம்யூ கட்சி 8 சூலை 2008ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.

ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி[தொகு]

காங்கிரசின் உமர் அப்துல்லா தலைமையிலான அரசிற்கு ஆதரவைத் தொடர்ந்து மஹ்பூபா முப்தி 4 சனவரி 2009ல் தமது கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டார்.[3]

பாட்டாளி மக்கள் கட்சி[தொகு]

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக 26 மார்ச்சு 2009ல் பாமக தலைவர் அறிவித்தார். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தமது கட்சி உறுப்பினர்கள் இருவர் பதவி விலகுவர் என்று அறிவிக்கப்பட்டது.

அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்[தொகு]

12 நவம்பர் 2012ல் தமது ஆதரவை விலக்கிக் கொண்டது.

திரிணாமுல் காங்கிரஸ்[தொகு]

சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கை காரணமாக 18 செப்டம்பர் 2012ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.

ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா[தொகு]

திராவிட முன்னேற்றக் கழகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]