எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்கான போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்கான போர்
2ஆம் உலகப்போர் பசிபிக் போரின் பகுதி

இவோ ஜீமா சண்டையின் போது சுறாபாச்சி மலைமீது அமெரிக்க கொடியேற்றம்
நாள் ஜனவரி – யூன், 1945
இடம் எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகள் பரிபிக்
நேச நாடுகள் வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா

 ஐக்கிய இராச்சியம்
 கனடா
 ஆத்திரேலியா
 நியூசிலாந்து

சப்பான் யப்பான் இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா செஃச்டர் W. நிமிட்ஃச்
ஐக்கிய அமெரிக்கா ஒலண்ட் சுமித்
ஐக்கிய அமெரிக்கா சிமொன் பக்னோர் 
ஐக்கிய அமெரிக்கா யோசப் W. ஃச்டில்வெல்
ஐக்கிய அமெரிக்கா ரே ஃசுபுரனஃச்
ஐக்கிய அமெரிக்கா மார்க் A. மிட்ச்சர்
சப்பான் ததமிச்சி குரிபயசி 
சப்பான் மிட்சுரு உசிசிமா
சப்பான் இசமு சோ 
இழப்புகள்
19,840 கொலை அல்லது காணவில்லை,
58,105 காயம்
90,400 கொலை அல்லது காணவில்லை,
17,000 காயம்,
7671 கைது


எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்கான போர் (Volcano and Ryukyu Islands campaign) எனபது இரண்டாம் உலகப் போரில் பசிபிக் போரின் ஓர் அங்கமாக நேசப் படைகளுக்கும் யப்பானியப் பேரரசுப் படைகளுக்குமிடையே பசிபிக் பெருங்கடலில் 1945 ஜனவரி முதல் யூன் வரையான காலப்பகுதியில் நடைபெற்ற சண்டைகள், முறியடிப்புச் சமர்கள் என்பவற்றைக் குறிக்கும்.

இப் போர் எரிமலை மற்றும் ரியுகுயு தீவுக் கூட்டத்தில் நடைபெற்றது. இப்போரின் முக்கிய சண்டைகளாக இவோ ஜீமா சண்டை (பெப்ரவரி 16-மார்ச் 26, 1945) ஒகினவா சண்டை (ஏப்ரல் 1-ஜூன் 21, 1945) என்பவற்றையும் முக்கிய கடற் சமராக தென்கோ நடவடிக்கையையும் குறிப்பிடலாம்.

இப்போரானது நெசப்படைகளின் யப்பான் அக்கிரமிப்புச் சமரின் ஒரு பகுதியாகும். ஆக்கிரமிப்புக்குத் தேவையான பின்னணித் தளங்களாக இவற்றை பயன்படுத்துவதும் யப்பானின் கப்பல் போக்குவரத்துகளை தடை செய்வதும் இதன் நோக்கமாக இருந்தன. இரோசிமா நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் அறிவிப்பு போன்ற நிகழ்வுகள், யப்பான் சரணடைந்தமை, இரண்டாம் உலப்போர் முடிவுற்றமை ஆக்கிரமிப்பு நடைபெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]