எராஸ்மஸ்
எராஸ்மஸ் | |
---|---|
![]() இளைய ஆன்சு கோல்பினால் வரையப்பட்ட எராஸ்மசின் புகைப்படம் (1523) | |
பிறப்பு | c. அக்டோபர் 28, 1466 ராட்டர்டேம் அல்லது கௌடா, பர்கிண்டிய நெதர்லாந்து |
இறப்பு | 12 சூலை 1536 பேசெல், பழைய சுவிசு குடியரசு | (அகவை 69)
மற்ற பெயர்கள் | Desiderius Erasmus Roterodamus, Erasmus of Rotterdam |
படித்த கல்வி நிறுவனங்கள் | Queens' College, Cambridge Collège de Montaigu, Paris University of Turin |
காலம் | மெய்யியல் மறுமலர்ச்சி |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
கல்விக்கழகங்கள் | University of Leuven |
முக்கிய ஆர்வங்கள் | கிறித்தவ மெய்யியல் மானுட மறுமலர்ச்சி |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | ஏராசுமசிய உச்சரிப்பு |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
ஏராஸ்மஸ் ரோட்டர்டாமில் பிறந்தார்.[1] இவர் டச்சு மற்றும் லத்தீன் இலக்கியங்களை இயற்றியவர். நூலகங்களைப் படிப்பதற்காகவே சமய துறவியானார். இவர் பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்றார். சர் தாமஸ் மூர், ஜான் கெலெட் போன்ற மானிட மரபாளர்களுடன் தொடர்புகொண்டவர்.
படைப்புகள்[தொகு]
மொழிபெயர்ப்பு நூல்கள்[தொகு]
- கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாட்டுக்கு லத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.
- சிசரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.
பிற[தொகு]
- இவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை
- ஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.
- கிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.
- அமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.
மேற்கோள்[தொகு]
- க. வெங்கடேசன், வி. சி. பதிப்பகம், ராஜபாளையம்