இரிமி பாசு சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிமி பாசு சின்கா
பிறப்புஅலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிபாடகர் / இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1986 முதல் தற்போது வரை
வலைத்தளம்
https://www.rimibasusinha.com/

இரிமி பாசு சின்கா (Rimi Basu Sinha) இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்த இவர் இந்தியாவில் மிகச் சில பெண் இசையமைப்பாளர்களில் ஒருவராவார். ஒரு பயிற்சி பெற்ற இசைக்கலைஞரான இவர் ஆறு வயதில் தனது பயிற்சியைத் தொடங்கினார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி பாரம்பரியத்தில் தனது முதுகலைப் படிப்பை முடித்தார். பின்னர் அலகாபாத்தின் பிரயாக் சங்க சமிதியிலிருந்து சங்க பிரபாகரம் மற்றும் இசையில் பட்டயச் சான்றிதழ் ஆகியவற்றையும் படித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அலகாபாத்தின் மிகவும் பிரபலமான பெங்காலி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இரிமி இசை மற்றும் நாடகச் சூழலில் வளர்ந்தார். இவர் ஆறு வயதிலேயே இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் பல கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடங்கினார். [1] பதினைந்து வயதில் இவர் அகில இந்திய வானொலியில் கலைஞராகி பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது இவர் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் சிறந்த தரம் வாய்ந்த கலைஞராக உள்ளார். [2] இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, மறைந்த சிறீ பி. என். பிஸ்வாஸ் ஜீயுடன் இந்துஸ்தானி இசையை பல வகைகளுடன் கற்கத் தொடங்கினார். இசை மற்றும் பாடலுக்கான இவரது திறமையைப் பார்த்து, இவரது பெற்றோர் பள்ளி மற்றும் கல்லூரி மட்டத்தில் இந்துஸ்தானி இசையை ஒரு பாடமாகப் படிக்க ஊக்குவித்தனர். அதைத் தொடர்ந்து, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர்களான பண்டிட் ராமாச்சரியா ஜா ஜீ மற்றும் திருமதி. கம்லா போஸ் மேற்பார்வையில் இந்துஸ்தானி இசையை முடித்தார். அலகாபாத்தின் பிரயாக் சங்க சமிதியிடமிருந்து ஒரு சங்கீத பிரபாகரம் மற்றும் மெல்லிசையில் முதுகலை சான்றிதழ் படிப்பு ஆகியவற்றையும் முடித்தார். [3] இசை வாழ்க்கையைத் தொடர இவரது குடும்பத்தினரால், குறிப்பாக அவரது கணவர் சிறீ ராம்கிருட்டிண சின்காவால் இவர் முழு ஊக்கமும் ஆதரவும் பெற்றார்.

தொழில்[தொகு]

இந்தியாவின் ஒரு சில பெண் இசை அமைப்பாளர்களில் ஒருவரான இரிமி, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் சிறந்த தர கலைஞர் ஆவார். [2] இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இவர் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை செய்துள்ளார். கென்யாவில் இவர் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த நைரோபியின் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் இவர் 4 கருத்துகள் கொண்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் முதலாவது, மையா கா தர்பார், என்பதை [4] இந்தியாவின் டைம்ஸ் குழுமத்தின் ஒரு நிறுவனமான டைம்ஸ் மியூசிக் தயாரித்தது. [5] [6] [7]

கவிதா கிருட்டிணமூர்த்தி, சுனிதி சவுகான், சிரேயா கோசல், உஷா மங்கேஷ்கர், குமார் சானு, மகாலட்சுமி ஐயர், கே.எஸ். சித்ரா, ரிச்சா சர்மா உள்ளிட்ட பிரபல கலைஞர்களுடன் தனது இசைத் தொகுப்புகள் மற்றும் பிற இசை பணிகள் மற்றும் திட்டங்களுக்காக பணியாற்றியுள்ளார். [1] பரணிடப்பட்டது 2019-09-26 at the வந்தவழி இயந்திரம்

இவர் தற்போது வலுவான கருத்துக்கள் / கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு இசை திட்டங்கள் / இசைத் தொகுப்புகள் பணியாற்றி வருகிறார். இந்தியன் தொலைக்காட்சி அகாடமி, சரேகாமா அகாடமி போன்ற குரல் கலாச்சாரவாதி / வழிகாட்டியாக மும்பையில் உள்ள நன்கு அறியப்பட்ட இசைக் கல்விக்கூடங்களுடன் இவர் தொடர்புடையவராவார்.

குறிப்புகள்[தொகு]

  1. Cultural programs organised by her school and other cultural and educational institutes /associations.
  2. 2.0 2.1 "ITASPA".
  3. "ITASPA - Delhi".
  4. "MAIYA KA DARBAAR". Archived from the original on 2019-09-26.
  5. "Times Music - Maiyya Ka Darbar". Archived from the original on 2019-09-26.
  6. "Sakhi Album". Archived from the original on 2019-09-26.
  7. "Apple iTunes".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிமி_பாசு_சின்கா&oldid=3593462" இலிருந்து மீள்விக்கப்பட்டது