ஆளுநர் மாளிகை, நைனித்தால்

| ஆளுநர் மாளிகை, நைனித்தால் | |
|---|---|
ஆளுநர் மாளிகை, நைனித்தால் | |
![]() | |
| பொதுவான தகவல்கள் | |
| வகை | கோடை குடியிருப்பு |
| ஆள்கூற்று | 29°22′26″N 79°27′25″E / 29.374°N 79.457°E |
| நிறைவுற்றது | 1897 |
| உரிமையாளர் | உத்தரகண்ட் அரசு |
| தொழில்நுட்ப விபரங்கள் | |
| தளப்பரப்பு | 205 ஏக்கர் |
| வடிவமைப்பும் கட்டுமானமும் | |
| கட்டிடக் கலைஞர்(கள்) | ச்டீவன்சு |
| பொறியாளர் | எப்.ஓ.டபிள்யூ. ஆர்டெல் |
| பிற தகவல்கள் | |
| அறைகள் எண்ணிக்கை | 113 |
| மேற்கோள்கள் | |
| Website Rajbhavan Nainital | |
உத்தரகண்ட் மாநிலத்தின் இரண்டாவது ஆளுநர் மாளிகை நைனித்தால் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இம்மாளிகை உத்தரகண்ட் ஆளுநரின் கோடைகால ஓய்வு விடுதியாகும். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், நைனிடால் ஐக்கிய மாகாணங்களின் கோடைகால தலைநகராக செயல்பட்டது மற்றும் சுகாட்டிஷ் கோட்டை போல் கட்டப்பட்ட இந்த கட்டிடம் "அரசு மாளிகை" என்று பெயரிடப்பட்டது. வடமேற்கு மாகாண ஆளுநரின் இல்லமாக ஆங்கிலேயர்களால் ஆளுநர் மாளிகை கட்டப்பட்டது. [1]
1897 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆளுநர் மாளிகை கட்டும் பணி தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆனது. இது ஐரோப்பிய பாணியில் மற்றும் கோதிக் கட்டிடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. நைனித்தாலில் உள்ள ஆளுநர் மாளிகை வடிவமைப்பாளர்கள் கட்டிடக் கலைஞர் ச்டீவன்சு மற்றும் நிர்வாகப் பொறியாளர் எப்.ஓ.டபிள்யூ. ஆர்டெல். சுதந்திரத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]
ஆளுநர் மாளிகை தோட்டங்கள் 220 ஏக்கர் பரப்பளவில் 45 ஏக்கர் நிலத்தில் கோல்ப் மைதானத்துடன் அமைந்துள்ளது. 1936 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆளுநர் மாளிகையின் கோல்ப் மைதானம், இந்தியாவின் பழங்கால கோல்ப் மைதானங்களில் ஒன்றாகும். மேலும் இது இந்திய கோல்ப் யூனியனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், உத்திரப்பிரதேசத்தின் முதல் ஆளுநரான சரோஜினி நாயுடு இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தின் முதல் குடியிருப்பாளராக இருந்தார். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Governor's House (Raj Bhavan)". Nainital.nic.in. Retrieved 15 February 2015.
- ↑ "An Introduction". governoruk.gov.in. Retrieved 15 February 2015.
