பூ. ம. செல்லத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூ. ம. செல்லத்துரை
பிறப்புபூபாலப்பிள்ளை மயன் செல்லத்துரை
(1936-06-05)5 சூன் 1936
பெரிய போரதீவு, மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை
இறப்புபெப்ரவரி 11, 2016(2016-02-11) (அகவை 79)
களுவாஞ்சிக்குடி, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுஎழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி
பெற்றோர்க. பூபாலப்பிள்ளை
மு. இராசம்மா

பூபாலபிள்ளை மயன் செல்லத்துரை (5 சூன் 1936 - 11 பெப்ரவரி 2016) இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், தமிழ்த் தேசியவாதியும் ஆவார். வண்ணன், மயன், நளன், கண்ணா போன்ற புனைபெயர்களிலும் இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

செல்லத்துரை கிழக்கிலங்கையில் பெரிய போரதீவில் க. பூபாலப்பிள்ளை, மு. இராசம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.[1] மட்டக்களப்பு அரசடி பாடசாலையிலும், பழுகாமம் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.[1] 1960 களில் பெரிய போரதீவில் பகுத்தறிவு இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் பின்னர் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளையாக உருவெடுத்தது. அக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணியாற்றினார்.[1]

எழுத்தாளராக[தொகு]

செல்லத்துரை பல கவிதைகள், வரலாற்று, ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். தாயகம், நேர்வழி, சமநீதி, தேனாடு ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1] 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.[2] 1995 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.[2]

எழுதிய நூல்கள்[தொகு]

  • தமிழனே கேள், 1958
  • தமிழரும் தாத்தாவும், 1962
  • இலங்கைத் தமிழ் வரலாறும் இன்றைய நிலையும், 1999
  • இலங்கையில் விஸ்வகர்மா, 2000
  • சிங்களவர் பூர்வீகம்
  • இலங்கையில் சமாதானத் தேடல்
  • இலங்கையின் இன நெருக்கடிக்குத் தீர்வென்ன?, 2006

விருதுகள்[தொகு]

  • சமூகசோதி பட்டம் (பெரியபோரதீவு இந்து இளைஞர் கலாமன்றம்)[1]
  • கலாவேந்தன் பட்டம் (தினக்குரல் ஆசிரியர்)
  • கலாபூசணம் (இலங்கை அரசு)

மறைவு[தொகு]

பூ. ம. செல்லத்துரை களுவாஞ்சிக்குடி அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், 2016 பெப்ரவரி 11 வியாழக்கிழமை காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
பூ. ம. செல்லத்துரை எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 வி. மைக்கல் கொலின். "இலங்கை தமிழர் வரலாறும் இன்றைய நிலையும்". பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "எழுத்தாளர்கள்: பூ. ம. செல்லத்துரை". tamilouthors.com. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கலாபூஷணம் பூ.ம.செல்லத்துரை காலமானார்". தமிழ்மிரர். 12 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._ம._செல்லத்துரை&oldid=3035308" இலிருந்து மீள்விக்கப்பட்டது