விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 14, 2009
- மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை நாய்களுக்கு உண்டு.
- உலகில் அதிக வருமானம் (2008) ஈட்டும் முதல் 500 (Fortune Global 500) வணிக நிறுவனங்களில் 170 ஐரோப்பிய ஒன்றியத்திலும், 153 ஐக்கிய அமெரிக்காவிலும், 64 யப்பானிலும் உள்ளன.
- ஒருவரின் பெயருடன் தாயின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
- வைரம், மரகதம், நீலம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புட்பராகம் வைடூரியம் ஆகியவை நவமணிகள் எனப்படும்.
- ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் ஜி. யு. போப் ஆவார்.