நா வள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா வள்ளி (நவம்பர் 10, 1950) என்னும் வள்ளி சொக்கலிங்கம் நகரத்தாரியல் ஆய்வாளர் ஆவார்[1].

நா வள்ளி
நா வள்ளி
பிறப்புநவம்பர் 10, 1950
கானாடுகாத்தான் இராமநாதபுரம் மாவட்டம்( 1984 முதல் சிவகங்கை மாவட்டம்) தமிழ் நாடு[1]
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்வள்ளி சொக்கலிங்கம்
கல்விM.A.,B.Ed.,Ph.D., P.G. Dip.In Epigraphy & Archaeology
அறியப்படுவதுநகரத்தாரியல் ஆய்வாளர்
சொந்த ஊர்காரைக்குடி
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
கி.சொக்கலிங்கம்

வாழ்க்கை குறிப்பு[தொகு]

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் 10.11.1950இல் பிறந்து, காரைக்குடி கி.சொக்கலிங்கம் செட்டியாரின் வாழ்க்கை துணைவி ஆனவர். எம்.ஏ., பி.எட்., டி.இ.ஏ., பட்டங்களை பெற்ற இவர், காரைக்குடி இராமசாமி தமிழ் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[2][1]

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால ஆய்வுத் திட்டத்தின் கீழ் 'சிற்பக்கலையின் சிறப்பும் சிற்பக்கலைக்கு முகவையின் பங்கும்' என்ற ஆய்வைச் செய்துள்ளார்.[1] இவர் எழுதிய 'திருப்பத்தூர்' என்னும் நூல் தொல்பொருள் ஆய்வுத் துறையால் வெளியிடப் பெற்றுள்ளது.[3]

'நகரத்தாரின் அறப்பணிகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[1]

சிற்பக்கலை, கல்வெட்டு மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

1.திருப்பத்தூர்(1981), தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.[3]

2. நகரத்தாரின் அறப்பணிகள்(2001), கிருஷ்ணா பதிப்பகம், காரைக்குடி.[4]

3. காளையார்கோவில் புராணம் உரைச் சுருக்கம் (2015)[5]

4. கோவிலூர்ப் புராணம் விளக்க உரை (2014), கோவிலூர் மடாலயம்.[6]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "நகரத்தாரியல் ஆய்வாளர் நா.வள்ளி ஆச்சி". நமது செட்டிநாடு - பழ.கைலாஷ். March 2023. http://www.namadhuchettinad.com/magazine.html. 
  2. "இராமசாமி தமிழ்க் கல்லூரி". Archived from the original on 2020-09-29. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. 3.0 3.1 "திருப்பத்தூர்- வள்ளி சொக்கலிங்கம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "நகரத்தார் அறப்பணிகள்". Archived from the original on 2020-11-25.
  5. "காளையார்கோவில் புராணம் உரைச் சுருக்கம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "கோவிலூர்ப் புராணம் விளக்க உரை". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா_வள்ளி&oldid=3852318" இலிருந்து மீள்விக்கப்பட்டது