தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மதுரை
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மதுரை (Tamil Nadu Government Music College, Madurai) தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில், தமிழ்நாடு மதுரை மாவட்டம் மதுரையில் இயங்கிவருகின்ற கல்லூரியாகும்.
பிற கல்லூரிகள்[தொகு]
தமிழ்நாட்டில் இசைக் கல்லூரிகள் சென்னை, திருவையாறு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ளன.
துவக்கம்[தொகு]
இக்கல்லூரி தமிழகத்தின் தென் மாவட்ட மாணவர்களின் நலனைக் கருதி 1979இல் தோற்றுவிக்கப்பட்டது. பசுமலை கோபாலிபுரம் மலையில் 14.10 ஏக்கர் நிலத்தை 1986இல் அரசு இசைக்கல்லூரிக்காக அரசு அளித்தது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக இணைவு பெற்று 2014 – 2015 முதல் செயல்படுகிறது.[1]
பட்டப்படிப்புகள்[தொகு]
இக்கல்லூரிகளில் மூன்று ஆண்டு பட்டயம், ஓராண்டு பட்டயம், மூன்று ஆண்டு இளங்கலை ஆகிய வகுப்புகள் நடத்தப்பெறுகின்றன. வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம், நாட்டுப்புறக் கலை, குரலிசை போன்ற பாடங்கள் முதன்மை மற்றும் துணைப்பாடங்களாக அமைந்துள்ளன.[1]